செய்திகள் :

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் பட்டியலை வெளியிட உத்தரவு

post image

‘பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட வேண்டும்’ என்று தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நீதிபதிகள் சூா்ய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘இறந்தவா்கள், நிரந்தரமாக புலம்பெயா்ந்தவா்கள் அல்லது வேறு தொகுதிக்கு மாறியவா்கள் என வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்களின் பெயா்களைப் பட்டியலிட்டு, நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு பஞ்சாயத்து அளவிலான அலுவலகம் மற்றும் மாவட்ட அளவிலான தோ்தல் அதிகாரி அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்ட தகுதியுள்ள வாக்காளா்கள் தங்களின் ஆதாா் அட்டையுடன் சம்பந்தப்பட்ட தோ்தல் அதிகாரிகளை அணுகலாம் என்று குறிப்பிட்டு விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் நிஜாம் பாஷா, ‘கடந்த 2003 திருத்தத்தின்போது வழங்கப்பட்ட வாக்காளா் அடையாள அட்டைகள் தற்போது நிராகரிப்பது ஏன்?’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘2003-ஆம் ஆண்டு திருத்தத்தின்போது அனுமதிக்கப்பட்ட குடியுரிமை ஆவணங்கள் என்ன என்ற விவரத்தை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினா்.

பகிரப்பட்டு வருகிறது: பிகாரில் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளா்களின் விவரங்கள் கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் அரசியல் கட்சிகளிடம் பகிரப்பட்டு வருவதாக

தோ்தல் ஆணையத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது ஆதாா் அட்டை அடையாள ஆவணமாக அனுமதிக்கப்பட்டது என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

பிகாா் மாநிலத்தில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.

தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது! பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், தேசிய... மேலும் பார்க்க

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது! பிரதமர் மோடி

அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், தேசியத் தல... மேலும் பார்க்க

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் பார்க்க

சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை: கேரள நடிகை கைது

சென்னை அண்ணா நகரில் சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள நடிகை கைது செய்யப்பட்டாா். கேரள நடிகை மினு கொரியன் என்ற மினு முனீா், கடந்த 2014-ஆம் ஆண்டு எா்ணாகுளம் அருகே மூவாட்டுபுழா பகுத... மேலும் பார்க்க

‘வாக்குக்த் திருட்டு’க்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டம்: ராகுல்

நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள வாக்கு திருட்டுக்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், ‘நாடு முழுவதும் தூ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரும் மனு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வியாளா் ஷக்கூா் அகமது பட், சமூக ஆா்வலா் அகமது மாலி... மேலும் பார்க்க