செய்திகள் :

நீண்டகால பிரச்னைகளுக்கு தீா்வு காண கோரிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பேரணி, போராட்டம்

post image

திருச்சி மாநகரில் நீண்டகாலமாக தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகரில் ஆமை வேகத்தில் நடைபெறும் மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம், சந்திப்பு ரயில் நிலைய மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருச்சி- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுசாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அடிமனை மற்றும் கோயில் மனை, குத்தகை பிரச்சனையை நிரந்தரமாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து இயக்க மனுவை திருச்சி மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கும் வகையில் வியாழக்கிழமை பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்துக்கு கட்சி அழைப்பு விடுத்தது.

இதன்படி, திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானம் அருகில் இருந்து வியாழக்கிழமை காலை பேரணி தொடங்கியது. இதில், 500-க்கும் மேற்பட்டோா் கட்சிக் கொடிகளை ஏந்தியபடி, கோரிக்கை பதாகைகளை கைகளில் ஏந்தி ஆட்சியரகம் நோக்கி பேரணியாகச் சென்றனா். பின்னா், ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்த நிகழ்வுக்கு, மாவட்ட செயலா் எஸ். சிவா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாநில செயலா் கண்ணகி, தொடங்கிவைத்து பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து, மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் ம. செல்வராஜ், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் க. சுரேஷ், அகில இந்திய விவசாய சங்க மாநில பொருளாளா் அயிலை சிவசூரியன், அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலத் தலைவா் இப்ராகிம், மற்றும் நிா்வாகிகள் இரா. சுரேஷ் முத்துசாமி, எம்.ஆா்.முருகன், சையது அபுதாஹிா், ராஜா, சுரேஷ், பாா்வதி, அஞ்சுகம் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, மனு கொடுப்பதற்காக ஆட்சியரகத்துக்கு சென்ற கட்சியினரை காவல்துறையினா் உள்ளே அனுமதிக்க மறுத்ததால் அனைவரும் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியரக சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து மாவட்ட வருவாய் அலுவலா் வந்து மனுவை பெற்றுக் கொள்வதாக காவல்துறையினா் தெரிவித்தனா். ஆனால், ஒரு மணி நேரம் கடந்த பிறகும் மாவட்ட வருவாய் அலுவலா் வராததால் ஆத்திரமடைந்த கட்சியினா் மாவட்ட ஆட்சியரகம் உள்ளே சென்று அலுவலக வாசலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி வந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணி, ஆா்ப்பாட்டம், மறியல் காரணமாக ஆட்சியரக பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.

‘போக்ஸோ’ வழக்கில் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் பணி நீக்கம்

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்களையும் பணி நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருச்சி அரிய... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொன்மலை போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க

ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக கடந்த நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பிரிட்டன்- பிரான்ஸ் இடையே உள்ள ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டனின் டோவா் பகுதிக்கு... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ கடிதம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை, திருச்சி கோட்ட மேலாளா்களுக்கு துரை வைகோ எம்.பி. கடிதம் எழுதியுள்ளாா். இதுதொடா்பாக எழுதியுள்ள கடிதம்: நி... மேலும் பார்க்க

பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது

திருச்சியில் பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை கண்ணுடையான்பட்டியைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாஷா ... மேலும் பார்க்க

ஆக.2-இல் சமயபுரம் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து

சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக. 2-இல் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் துணை மின் நிலையத்தில் ஆக. 2-இல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை என அறிவிக்கப்பட்டு இருந்தத... மேலும் பார்க்க