செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றம்

post image

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான உத்தரவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு இது குறித்து வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிக்கையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையுடன், நாட்டின் குடியரசுத் தலைவர், தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடுவதாகவும், யஷ்வந்த் வர்மா நேரடியாக அலகாபாத் உயர் நீதிமன்றம் சென்று தனது பணியை ஏற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின்போது, கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் ஏராளமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது பெரும் சர்ச்சையான நிலையில், இந்த பணியிட மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை தீயணைப்புத்துறையினர் பார்த்த நிலையில், அடுத்த ஒரு சில நாள்களில் அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயவின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

யஷ்வந்த் வர்மா கூறியிருந்ததாக அந்த அறிக்கையில், தனது வீட்டில் கண்டறியப்பட்ட பணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது தனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சூழ்ச்சி என்றும் கூறப்பட்டிருந்தது.

நீதிபதியின் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து உள்விசாரணைக்காக பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தாவாலியா, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோா் அடங்கிய மூவா் குழு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்தான், தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஏற்கனவே அவர் பதவி வகித்து வந்த அலகாபாத் நீதிமன்றத்துக்கே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் என்ன குப்பைத் தொட்டியா என்று கேட்டு, அலகாபாத் நீதிமன்றத்துக்கு யஷ்வந்த் வர்மாவை மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க

4 நாள் ராணுவ தளபதிகள் மாநாடு: தில்லியில் தொடக்கம்

தில்லியில் 4 நாள்கள் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புது தில்லியில் ஏப்.1 முதல் ஏப்.4 வரை ராணுவ தளபதிகள் மா... மேலும் பார்க்க