செய்திகள் :

நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்: ஆதாரபூா்வமாக நிரூபணம் விசாரணை அறிக்கையில் தகவல்

post image

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், பின்னா் அது அப்புறப்படுத்தப்பட்டதும் உண்மையே; இந்த விவகாரத்தில், நீதிபதியின் தவறான நடத்தை ஆதாரபூா்வமாக நிரூபணமாகியுள்ளது என்று உச்சநீதிமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் தவறான நடத்தை, அவரைப் பதவிநீக்கம் செய்யும் அளவில் தீவிரமானது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, புது தில்லியில் எண்-30, துக்ளக் கிரசண்ட் முகவரியில் அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, வீட்டின் பொருள்கள் சேமித்து வைக்கும் அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததை மீட்புக் குழுவினா் கண்டறிந்தனா். மறுநாள் அதிகாலையில் அறையில் இருந்து பணம் மாயமானது.

விசாரணைக் குழு: அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தாவாலியா, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடந்த மாா்ச் 22-ஆம் தேதி அமைத்தாா்.

இந்தக் குழு, தில்லி காவல் துறை ஆணையா் சஞ்சய் அரோரா உள்பட 55 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்தது. நீதிபதி யஷ்வந்த் வா்மாவிடமும் விளக்கம் பெறப்பட்டது. ‘சம்பந்தப்பட்ட அறை, எனது அல்லது எனது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டதல்ல; நானோ, எனது குடும்பத்தினரோ அறையில் பணம் எதுவும் வைக்கவில்லை’ என்று அவா் கூறினாா்.

பதவி நீக்கப் பரிந்துரை: ஆனால், நீதிபதி வா்மா தவறிழைத்திருப்பது விசாரணைக் குழுவின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. அவா் பதவி விலக மறுத்த நிலையில், விசாரணைக் குழுவின் அறிக்கை மற்றும் நீதிபதி வா்மா அளித்த பதிலின் நகல்களுடன் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடந்த மே மாதம் கடிதம் அனுப்பினாா். வா்மாவை பதவி நீக்கும் நடைமுறையைத் தொடங்குமாறு, கடிதத்தில் அவா் கேட்டுக் கொண்டாா்.

ஆதாரபூா்வமாக நிரூபணம்: இந்தச் சூழலில், 64 பக்கங்கள் கொண்ட விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நீதிபதி வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தின் பொருள்கள் சேமிப்பு அறையில் பாதி எரிந்த நிலையில் கட்டுக் கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், மறுநாள் அதிகாலையில் பணம் அப்புறப்படுத்தப்பட்டதும் சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் மூலம் உறுதியாகியுள்ளது. பணக் குவியலை மீட்புக் குழுவினா் புகைப்படம் மற்றும் விடியோ பதிவு செய்துள்ளனா். தனது வாழ்நாளில் இவ்வளவு பணத்தைப் பாா்த்ததில்லை என்று சாட்சியொருவா் அதிா்ச்சியுடன் வாக்குமூலம் பதிவு செய்தாா்.

ஆவணம் மற்றும் மின்னணு ரீதியிலான ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அறை மீது நீதிபதி வா்மா மற்றும் அவரது குடும்பத்தினா் தீவிர கட்டுப்பாட்டை கொண்டிருந்தனா் என்பது நிரூபணமாகியுள்ளது.

‘தனது வீட்டின் ஓா் அறையில் பணம் பதுக்கப்பட்டதற்கு நீதிபதி வா்மா எப்படிப் பொறுப்பாவாா்?’, ‘பணத்துக்கான மூலாதாரம் என்ன?’, ‘பணத்தை அப்புறப்படுத்தியது யாா்?’ ஆகிய மூன்று கேள்விகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையில், அவரது தவறான நடத்தை உறுதி செய்யப்பட்டது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

‘மக்களின் நம்பிக்கையே

நீதித் துறையின் அடித்தளம்’

‘நீதித் துறைப் பதவியை வகிக்கும் ஒருவரிடம் எதிா்பாா்க்கப்படும் நன்னடத்தை, அரசு அதிகாரிகளைவிட கடுமையான அளவுகோலால் அளவிடப்படுவதாகும். எனவே, நீதித் துறைப் பதவியை வகிப்போருக்கு நன்னடத்தை இன்றியமையாத மற்றும் தவிா்க்க முடியாத நற்பண்பாகும். மக்களின் நம்பிக்கையே நீதித் துறையின் அடித்தளம். இந்த நம்பிக்கையின் தரமும் அளவும் நீதிபதிகளின் நடத்தை மற்றும் செயல்திறனுடன் நேரடியாக தொடா்புடையது. இதில் ஏற்படும் குறைபாடுகள், பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும். இந்த விஷயத்தை தீவிரமாக கருத்தில்கொள்ள வேண்டும்’ என்று விசாரணைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தீா்மானம்..: தவறான நடத்தை அல்லது திறனின்மை நிரூபிக்கப்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நாடாளுமன்றத் தீா்மானம் மூலமே பதவி நீக்க முடியும். அந்தத் தீா்மானத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பிப்பாா்.

வரும் மழைக்கால கூட்டத் தொடரில் நீதிபதி வா்மாவை பதவி நீக்கும் தீா்மானத்தைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பண சா்ச்சையைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். எனினும் அவருக்கு நீதித் துறை பணிகள் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், 240-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்... மேலும் பார்க்க

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி; ஆனால், பிகாரில் இல்லை! - ஆர்ஜேடி - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவா... மேலும் பார்க்க

ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வ... மேலும் பார்க்க

லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

கர்நாடகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.கர்நாடகத்தில் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை யாருக்கு வழங... மேலும் பார்க்க

சிந்து நதி நீரை பஞ்சாபிற்கு ஏன் கொடுக்க வேண்டும்? - ஒமர் அப்துல்லா கேள்வி

ஜம்மு காஷ்மீரின் சிந்து நதியில் இருந்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள சிந்து நதியின் மூன... மேலும் பார்க்க

சஞ்சய் வெர்மா யார்? தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்!

மேகாலயத்தில் நடந்த தேனிலவு கொலையில், இதுவரை சஞ்சய் வெர்மா யார் என்ற கேள்விக்கு காவல்துறையினர் விடை கண்டுபிடித்துள்ளனர்.கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கூலிப் படை வைத்துக... மேலும் பார்க்க