செய்திகள் :

நீதிமன்றத்தை அவதூறு பேச்சு; ஹெச்.ராஜா மீதான வழக்கு மே 21-க்கு ஒத்திவைப்பு

post image

நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசியதாக பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா மீதான வழக்கு விசாரணையை மே 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு திருமயம் மெய்யபுரத்தில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தின்போது, அதில் பங்கேற்ற பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா நீதிமன்றத்தை அவமரியாதையாகப் பேசினாா்.

இதுகுறித்து திருமயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. ஹெச். ராஜா தரப்பில் வழக்குரைஞா்கள் ஆஜராகினா். இதையடுத்து வழக்கு விசாரணையை மே 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் சி. பாரதி உத்தரவிட்டாா்.

வடகாடு பட்டியலின மக்கள் மீது தாக்குதல்; மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளி... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் விசிகவினா் சாலை மறியல்

கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள வடகாடு கிராமத்தில் மாரியம்மன் கோயில் தோ் திருவிழ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் வதந்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை

மதுபோதையில் இரு தரப்பு இளைஞா்களிடையே ஏற்பட்ட மோதலை, இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக பரப்பும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 20 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலா் உள்பட 20 போ் காயமடைந்தனா். ஆலங்குடி அருகே வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கி... மேலும் பார்க்க

தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் குடும்ப நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூரைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவா், த... மேலும் பார்க்க