செய்திகள் :

நீலகிரி: பழங்குடி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; தலைமறைவிலிருந்த ஆசிரியர் கைது; பின்னணி என்ன?

post image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வரும் மாரியப்பன் என்பவர் 11 மற்றும் 12 - ம் வகுப்பு மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறைக்கு அண்மையில் புகார் அழைப்பு வந்திருக்கிறது.

ரகசியமாக பள்ளிக்குச் சென்ற பெண்கள் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மாணவிகளிடம் அழைத்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Child Abuse
Child Abuse

ஆங்கில பாடம் நடத்தி வந்த ஆசிரியர் மாரியப்பன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக 6 பழங்குடி மாணவிகள் மற்றும் ஒரு பட்டியல் சமுதாயத்தை மாணவி ஒருவர் என 7 பேர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆசிரியர் மாரியப்பன் திடீரென தலைமறைவானார்.

காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடிவந்தனர். தென்காசி பகுதியில் தலைமறைவாக இருந்த அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதன் பின்னணி குறித்துத் தெரிவித்த காவல்துறையினர், "ஆசிரியர் மாரியப்பன் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் நிரந்தர ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரின் மனைவியும் அரசுப் பள்ளியில் நிரந்தர ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளிடம் நட்பு பாராட்டுவதைப் போன்று பழகி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

கைதான மாரியப்பன்
கைதான மாரியப்பன்

மாணவிகள் கண்டித்தும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதே அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் பணியாற்றிய பள்ளி ஒன்றிலும் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அது குறித்தும் விசாரணை நடத்தப்படும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

UP வரதட்சணை கொடுமை: "அம்மா மீது தீ வைத்தனர்" - குழந்தை கண்முன் தாயை எரித்து கொன்ற கணவர் குடும்பம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சிர்ஷா என்ற இடத்தில் வசிப்பவர் விபின். இவரது மனைவி நிக்கி. இவர்களுக்குக் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிக்கியின் மூத்த சகோதரி காஞ்சன் என்பவரையும்... மேலும் பார்க்க

மும்பை: ஒரு வங்கிக்கணக்கு விலை ரூ.7000; ஏழைகளிடம் வங்கிக்கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி செய்த கும்பல்

சமீபகாலமாக இணையத்தளக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடன் தருவதாகவோ அல்லது பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் கைது எனப் பல்வேறு வழிகளில் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பறித்து வருகின்றனர். இ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் குப்பை தொட்டியில் 6 வயது குழந்தையின் பிணம்; விசாரணையில் பகிர் தகவல்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்திலிருந்து மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையம் வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் கழிவறைக்குள் இருந்த குப்பை தொட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது ஒரு குப்பை த... மேலும் பார்க்க

Cyber Crime: வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழ்; திறந்து பார்த்ததால் ரூ.2 லட்சத்தை இழந்த நபர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழைத் திறந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்குள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் வசிக்கும் அரசு ஊழியர் சுக்ராம் ஷிண்டே என்பவருக்கு அ... மேலும் பார்க்க

SBI வங்கியில் ரூ.2000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு நெருக்கமான இடங்களில் CBI ரெய்டு

தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்நிறுவனங்கள் இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி க... மேலும் பார்க்க

திருப்பூர்: போன் செயலியில் கிடைத்த நட்பு; ரூ.92,000-ஐ பறிகொடுத்த இளைஞர்; 4 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரம் சாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிரைண்டர் என்ற செல்போன் ஆஃப் மூலம் சபரிராஜன் என்பவரிடம் பழகி உள்ளார். இந்நிலையில், அந்த இளைஞரைத் தனிமையில் சந்த... மேலும் பார்க்க