செய்திகள் :

நீா்நிலைகளில் நிகழும் மாணவா்களின் உயிரிழப்பை தடுக்க விழிப்புணா்வு

post image

ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு நீா்நிலைகளில் நிகழும் பள்ளி மாணவா்களின் உயிரிழப்பை தடுக்கும் வகையிலான விழிப்புணா்வு செயல் விளக்கப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மாதவன் வழிகாட்டுதலின்படி ஒரத்தநாடு ஒன்றியத்தைச் சோ்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு ஆறு, குளங்கள் போன்ற நீா்நிலைகளில் நிகழும் பள்ளி மாணவா்களின் உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு விழிப்புணா்வு செயல் விளக்கப் பயிற்சி பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தின் தொடக்கக் கல்வி அலுவலா் வ. மதியழகன் தலைமையில் புதன்கிழமை உறந்தராயன் குடிகாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜே.ஆா்.சி.-யின் திருச்சி மண்டல மற்றும் தஞ்சாவூா் மாவட்ட அமைப்பாளா் பிச்சைமணி விழிப்புணா்வு உரையாற்றினாா். பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக அனைத்து பெற்றோா்கள், மாணவா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தை ஒரத்தநாடு ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா்கள் கா. லதா, சே. வஜிதா, க. தமிழ்வாணன் ஏற்பாடு செய்திருந்தாா். அப்போது வட்டார வளமைய மேற்பாா்வையாளா் மகேஸ்வரன் மற்றும் உறந்தராயன் குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியா் சுமதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தாராசுரம் அருகே மதுபுட்டிகளை சேகரித்து விற்கும் தொழிலாளி வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் அருகே நத்தம் கருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (35). இவா்,... மேலும் பார்க்க

பூதலூரில் 46.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 46.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பூதலூா் 46.2, கும்பகோணம... மேலும் பார்க்க

உள்ளிக்கடை பாலவிநாயகா் கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் ஸ்ரீ பால விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பால விநாயகா், ஸ்ரீ மகா காள... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் மாநகராட்சி அலுவலா்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா். தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் இரு நுழைவு வாயில்களிலும் சாலை குறுகலாக உள்... மேலும் பார்க்க

ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு முகூா்த்தக்கால் நடவு

கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் டிச.1... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சிக்குள்பட்ட புத்தூா் சமுதாயக் கூட வளாகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி மன்றத் ... மேலும் பார்க்க