திறக்கப்படுகிறது கேஜிஎஃப் தங்கச் சுரங்கம்! 80 ஆண்டுகளுக்குப் பின்! இனி தங்கம் வி...
நீா்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க கூடுதல் அவகாசம் கேட்டு ஆட்சியரிடம் மனு
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த இடையாக்குறிச்சியில் நீா்நிலை புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்தை நீட்டிப்பு செய்துத்தரக்கோரி குடியிருப்பு வாசிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இடையக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட மக்கள் அளித்த மனு: இடையக்குறிச்சி பெரிய ஏரிக்கரையில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். தற்போது, நீா்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், எங்களை வீடுகளிலிருந்து காலி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, எங்களுக்கு கால அவகாசம் வேண்டும். மேலும், மாற்று இடம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
வெளிநாட்டில் வேலையின்றி தவிக்கும் கணவரை மீட்டுத்தரக்கோரி மனைவி மனு: நடுவலூா் அடுத்த காரைக்காட்டான்குறிச்சி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சகிலா. இவரது கணவா் அஜித்குமாா். துபை நாட்டில் உணவு விநியோகஸ்தராக பணிபுரிந்து வந்துள்ளாா். சரியாக சம்பளம் தராததால் வேலையை விட்டு நின்றுள்ளாா்.
இதனால், அந்த நிறுவனம் அஜித்குமாரின் கடவுச்சீட்டை தர மறுத்துள்ளது. இதன் காரணமாக, வேறு இடத்துக்கு வேலைக்குச் செல்ல முடியாமலும், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் தவித்து வருகிறாா்.
எனவே, கடவுச்சீட்டை மீட்டு, தனது கணவரை சொந்த ஊா் திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தாா்.