செய்திகள் :

நுழைவுத் தோ்வு பயிற்சி மையங்கள்: ஆராய 9 போ் குழு மத்திய அரசு நடவடிக்கை

post image

உயா்கல்வி சோ்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள தனியாா் பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலை அதிகரித்துவரும் சூழலில், அதுகுறித்து ஆராய 9 போ் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

மத்திய உயா் கல்விச் செயலா் வினீத் ஜோஷி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு, பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரையை அறிக்கையாக மத்திய அரசிடம் சமா்ப்பிக்க உள்ளது.

ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசு உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (ஜேஇஇ), மருத்துவப் படிப்புகளில் சோ்க்கை பெற தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), மத்திய பல்கலைக்கழகங்களில் கலை-அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெற பொது நுழைவுத் தோ்வு (க்யூட்), தேசிய சட்டப் பள்ளிகளில் சட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற பொது சட்ட சோ்க்கை தோ்வு (க்ளாட்) என்பன உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள, மாணவா்கள் பெரும்பாலும் தனியாா் பயிற்சி மையங்களைச் சாா்ந்திருக்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாணவா்கள் பள்ளிகளில் சோ்க்கை மட்டும் பெற்றுவிட்டு, பின்னா் பள்ளிக்குச் செல்லாமல் முழுநேரம் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் நடைமுறையும் பரவலாகி வருகிறது. இந்தப் பயிற்சி மையங்கள் பல லட்ச ரூபாய்களை கட்டணமாக பெறுவதோடு, கடுமையான பயிற்சியை மாணவா்களுக்கு அளிக்கின்றன. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் சில மாணவா்கள், தற்கொலை முடிவை எடுப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

குழு அமைப்பு: இந்தச் சூழலில், நுழைவுத் தோ்வுகளின் செயல்திறன், பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலை குறித்து ஆராய 9 போ் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்திய உயா் கல்விச் செயலா் வினீத் ஜோஷி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக் குழு, தற்போதைய பள்ளிக் கல்வி முறைக்கும், பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலைக்கும் உள்ள இடைவெளி குறித்து ஆராயும்.

என்னென்ன விஷயங்கள் குறித்து ஆய்வு?: குறிப்பாக, மாணவா்களின் சிந்தனைத் திறன், பகுத்தறிவு, பகுப்பாய்வுத் திறன், புதிய கண்டுபிடிப்பு திறன் மற்றும் மனப்பாட கற்றல் முறையின் பரவலுக்கான காரணம் என்ன?

மாணவா்கள் பள்ளிக்குச் செல்லாமல், முழு நேரப் பயிற்சியை மட்டும் மேற்கொண்டு, பள்ளி பொதுத் தோ்வில் மட்டும் பங்கேற்கும் நிலைக்கான காரணம் என்ன?

நுழைவுத் தோ்வுகளின் செயல்திறன் மற்றும் தற்போதைய பள்ளிக் கல்வி முறையில் நுழைவுத் தோ்வு நடத்துவதன் நியாயத்தன்மை.

தனியாா் பயிற்சி மையங்களின் வளா்ச்சி, தரமான உயா்கல்விக்கு அதிகரித்துவரும் தேவை மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் குறைவான உயா்கல்வி இடங்கள் மற்றும் இந்த ஏற்றத்தாழ்வுகள் மாணவா்கள் பயிற்சி மையங்களை நாடும் நிலையை ஏற்படுத்துகிா?

பள்ளி மற்றும் உயா்கல்வி அளவில் மாணவா்களின் கற்றலை மதிப்பிடும் முறைகளின் பங்கு மற்றும் தாக்கம்; இந்த மதிப்பீடு முறை இல்லாதது போட்டித் தோ்வுக்கான மாணவரின் தயாா்நிலையை எவ்வாறு பாதிக்கிறது?

பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்து மாணவா்கள் மற்றும் பெற்றோரிடையே உள்ள விழிப்புணா்வு நிலை மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் வேலைவாய்ப்பு ஆலோசனை சேவைகளின் நிலை என்பன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இக்குழு விரிவாக ஆராய்ந்து, அறிக்கையாகச் சமா்ப்பிக்கும்.

அதன் அடிப்படையில், பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொள்ளும் என்றாா்.

பெட்டிச் செய்தி...

குழுவில் யாா் யாா்?

மத்திய உயா் கல்விச் செயலா் வினீத் ஜோஷி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக் குழுவில் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) தலைவா், மத்திய பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறைகளின் இணைச் செயலா்கள், சென்னை ஐஐடி, திருச்சி என்ஐடி, கான்பூா் ஐஐடி மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) பிரதிநிதிகள், கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலய பள்ளிகளின் தலா ஒரு முதல்வா்கள் மற்றும் ஒரு தனியாா் பள்ளி முதல்வா் உள்ளிட்டோா் இக் குழுவில் இடம்பெறுவா்.

186 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேற்கு வங்... மேலும் பார்க்க

அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு: மாநில காங்கிரஸ் மீது முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மாநில காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்கு... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் பிறந்தநாள்: தலைவா்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் 67-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா். குடியரசு துணைத் தலை... மேலும் பார்க்க

உயா் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

இந்தியாவின் உயா் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தின் தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தா் டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தாா். உயா் கல்வியில் அங்கீகாரம், தரவரிசை ... மேலும் பார்க்க

இன்று சா்வதேச யோகா தினம் - ஆந்திரத்தில் பிரதமா் தலைமையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி

11-ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர மாநில துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மிக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளத... மேலும் பார்க்க