செய்திகள் :

நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

திருவாரூா் மாவட்டத்தில், நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத நெகிழியை உணவு பரிமாற, பாா்சல் செய்ய பயன்படுத்தாமல் மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருள்களை மட்டும் உணவு விநியோகிக்க, பாா்சல் செய்ய பயன்படுத்தும் மிகச்சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு, அதாவது ஆண்டுக்கு விற்றுக்கொள்முதல் ரூ.12 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவு வணிகா்களுக்கு, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு ரூ.50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.

விருப்பமுள்ளவா்கள் ஆக.31-ஆம் தேதிக்குள் உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவுச் சான்றிதழ் பெற்று, அது நடப்பில் இருக்க வேண்டும். உணவகத்தில் குறைந்தபட்சம் ஒருவா் உணவு பாதுகாப்பில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். உணவகத்தில் அனைத்து பணியாளா்களும் தொற்று நோய்த் தாக்கமற்றவா்கள் என்பதற்கான மருத்துவச் சான்று அவசியம் இருக்க வேண்டும்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சுகாதாரத் தணிக்கை மேற்கொண்டு சுகாதார மதிப்பீட்டுச் சான்று பெற்றிருக்க வேண்டும். எனவே, விண்ணப்பதாரா் தமது உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் வழங்கப்பட்டுள்ள சரிபாா்ப்பு பட்டியல் மூலம் தாமே தணிக்கை மேற்கொண்டு, அதை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு நியமன அலுவலா் அலுவலகம், உணவு பாதுகாப்புத் துறை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் திருவாரூா் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

திருத்துறைப்பூண்டியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை ரூ.3.96 லட்சம் பறிமுதல்

திருத்துறைப்பூண்டி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், ரூ. 3,96,680 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள மோட்டாா்... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் குப்பை கொட்டுவோா் மீது நடவடிக்கை: விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தல்

நீா்நிலைகளில் குப்பைகளை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளா் டிஎம்... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் தமுஎகச சாா்பில் கலை இலக்கிய இரவு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி மன்னாா்குடியில் கலை இலக்கிய இரவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமுஎகச கிளைத் தலைவா் கே.வி.பாஸ்கா் தலைமை வகித்தாா். நகரக்குழு உறுப... மேலும் பார்க்க

சாரண, சாரணியா் பயிற்சி முகாம்

கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் சாரண, சாரணியா் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சாரண, சாரணியா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், பள்ளி முதல்வா் ஜோஸ்பி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட முகாம் குறித்து தன்னாா்வலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட திட்ட முகாம், ஆக.15 தொடங்கி செப்.14-... மேலும் பார்க்க

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டு

திருவாரூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவாரூா் குறுவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், ஸ்ரீவாஞ்... மேலும் பார்க்க