செய்திகள் :

நெடுஞ்சாலை ஆணையத்தில் பொறியாளர் வேலை வேண்டுமா?

post image

அரசு சாரா நிறுவனமான இந்திய தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவன லிமிடெட் நிறுவனம் தேசிய நெடுஞ்சாலைகளில் மின்னணு சுங்க வசூல் முறையை செயல்படுத்தவும் நிர்வகிக்கிப்பதற்காகவும் மற்றும் நெடுஞ்சாலைகளின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் போக்குவரத்து நிலைமைகளை மேம்படுத்தவும் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகளை பயன்படுத்துவதற்காக நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: IHMCL/HR/Recruit/01/2025/01

பணி: Engineer(ITS)

காலியிடங்கள்: 49

சம்பளம்: ரூ.40,000 - 1,40,000

தகுதி: தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், மின் கருவிகள், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை(மே 24) கடைசி நாள்!

வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட் 2025 தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ihmcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.6.2025

மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

நாள்தோறும் ரூ.1000 சம்பளத்தில் உளவியல் ஆலோசகர் வேலை வேண்டுமா?

ஈரோடு மாவட்ட சமூக நலத் துறையின்கீழ் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகத்தில் உளவியல் ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Counsellorகாலியிடம்: ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கியில் 2964 வட்டார அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 2,964 வட்டார அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி... மேலும் பார்க்க

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: 2025-ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, கலந்தாய்விற்கு முன் மேலும் அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க

ஜிப்மரில் 11 மருத்துவப் பேராசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் 11 மருத்துவப் பேராசிரியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்ச... மேலும் பார்க்க

ரூ.63 ஆயிரம் சம்பவத்தில் டெக்னீஷியன் வேலை வேண்டுமா?

தேசிய அறிவியல் அருங் காட்சியகத்தில் காலியாகவுள்ள டெக்னீஷியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்.: 05/2025பணி: Technician 'A'காலியிடங்கள்: 13 (Fit... மேலும் பார்க்க

மிஸ் பண்ணிடாதீங்க... ஐடிபிஐ வங்கியில் 676 இளநிலை உதவி மேலாளர் பணி!

வங்கி பணியில் சேருவதே குறிக்கோளாக வைத்து படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக, மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) சொந்தமான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 676 இளநில... மேலும் பார்க்க