செய்திகள் :

நெல்லை: காங். தலைவர் ஜெயகுமார் மரண வழக்கு; 400 நாள்களைக் கடந்து நீடிக்கும் மர்மம்; திணறும் போலீஸார்

post image

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகிலுள்ள கரைசுத்துப்புதூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார். இவர், கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், 4-ம் தேதி அவரது வீட்டிற்குப் பின்புறமுள்ள தோட்டத்தில் கை, கால்கள் கம்பியால் கட்டப்பட்டு உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மர்ம மரணம் குறித்து 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸார் விசாரணை

இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத சூழலில் இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. ஜெயக்குமார் கைப்பட எழுதியதாக கூறப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், தொழிலதிபர்கள், நண்பர்களிடம் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டது.  அந்தப் பகுதியிலுள்ள செல்போன் டவர்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் பதிவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த எண்கள் அனைத்தையும் போலீஸார் ஆய்வுக்கு உட்படுத்தி வந்தனர். இந்தநிலையில் சம்பவம் நடந்த அன்று திசையன்விளையிலுள்ள ஒருகடைக்கு வந்து சென்றதால் அதுதொடர்பாக கடையின் உரிமையாளர், மேலாளர், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதற்கிடையில் உவரி, குட்டம், சுரைசுத்துப் புதூர்ஆகிய பகுதிகளிலுள்ள செல்போன் டவர்களில் இருந்து வந்த அழைப்புகள் குறித்து இரண்டாவது முறையாக விசாரணை நடத்தினர். மேலும், ஜெயக்குமார் அடிக்கடி வந்து செல்லும் ஹோட்டல்கள், டீக்கடைகள், பெட்டிக் கடைகளுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

ஜெயக்குமார் எழுதிய கடிதம்

ஆனாலும் சரியான முகாந்திரம் கிடைக்கவில்லை. இவ்வழக்கில் விஞ்ஞானப் பூர்வமாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கரைசுத்துப்புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட கல்விளை என்ற கிராமத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் வைத்து 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 400 நாள்களுக்கு மேல் ஆகியும் முடிவு எட்டப்படாததால் திணறி வருகிறார்கள்.

திருமணம் செய்த மறுத்த நபர்; 14 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் சென்னையில் கைது!

குஜராத்திற்கு கடந்த மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டே இருந்தது. அதுவும் குறிப்பாக அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்து... மேலும் பார்க்க

போலீஸுக்கு தண்ணிகாட்ட குளத்தில் குதித்த இளைஞர் - படகில் சென்று தட்டி தூக்கிய தீயணைப்பு வீரர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த காட்டாத்துறை குருவிளைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (43). கட்டடம் கட்டும் கொத்தனாராக வேலை செய்துவருகிறார். இவர் காட்டாத்துறையில் விஜி என்பவர் நடத்தி வரும் இறைச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு; 5 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவடையாத விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகிய 2 பேர் போலீஸாரின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தனர். கடந்த 22-ம் தேதி இ... மேலும் பார்க்க

மதுரை: பட்டியலினப் பெண் அரசு ஊழியர் தற்கொலை; சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகக் காதல் கணவர் மீது புகார்

காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினப் பெண் அரசு ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது கணவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்ப... மேலும் பார்க்க

வேலூர்: மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட இலவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி மணிவண்ணன் (வயது 49). கடந்த 2019-ம் ஆண்டு, 20 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வீட்டில் தனியாக... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ”உன்னால் எங்க நிம்மதி போச்சு” - போதையில் தகராறு செய்த கணவன்; கத்தியால் குத்தி கொன்ற மனைவி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள எருமைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (45). இரவது மனைவி சிந்தனை செல்வி (25).இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வ... மேலும் பார்க்க