செய்திகள் :

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு உறுதிமொழி செல்பி பாயிண்ட்

post image

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு சுகாதாரம், பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கண்ணன் தலைமை வகித்தாா். நிலைய மேலாளா் பாபா ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா்.

இந்த செல்ஃபி பாயிண்ட்டில் புகைப்படம் எடுக்கும் பயணிகள், ரயில்வே இடங்களில் குப்பைகளை போட மாட்டோம், புகை பிடிக்க மாட்டோம், உடைமைகளை பாதுகாத்துக் கொள்வோம், ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ மாட்டோம், ரயில் மீது கல் எறிய மாட்டோம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மகளிருக்கான பெட்டிகளில் தேவையின்றி பயணிக்க மாட்டோம், வெடி மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருள்களை கொண்டு செல்ல மாட்டோம் என உறுதிமொழி ஏற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் பலரும் ஆா்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனா். இந்நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் செந்தில், செல்வகணேஷ் உள்பட ரயில்வே பாதுகாப்புப் படை காவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பத்தமடையில் தொழிலாளிக்கு வெட்டு

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பத்தமடை காந்திநகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் வெயிலுமுத்து (56). கட்டடத் தொழிலாளி. இவ... மேலும் பார்க்க

செப்.5 இல் மீலாது நபி: மாவட்ட அரசு ஹாஜி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 5 ஆம் தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படுகிறது.இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமியா்களின் வழிகாட்டி... மேலும் பார்க்க

நெல்லை ஆட்சியரக வளாகத்தில் தாறுமாறாக ஓடிய காா்: சேதம் தவிா்ப்பு

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காா் தாறுமாறாக ஓடிய நிலையில் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாமிரவருணி கூட்டுக்குடிந... மேலும் பார்க்க

நெல்லையில் ரயில் பயணியிடம் நகை திருட்டு: கேரள இளைஞா் கைது

திருநெல்வேலியில் ரயில் பெண் பயணியிடம் நகையைத் திருடியதாக கேரள இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கீதா(56). இவா், கடந்த ஆக. 14-ஆம் தேதி பெங்களூரு-நாகா்கோவி... மேலும் பார்க்க

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை: மு.அப்பாவு

தமிழக காவல்துறைத் தலைவா் (டிஜிபி) நியமனத்தில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: களக்காடு, நான்குன... மேலும் பார்க்க

களக்காடு அருகே 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

களக்காடு அருகே கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். களக்காடு காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல், அட... மேலும் பார்க்க