செய்திகள் :

நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை

post image

நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமலுக்கு வந்துள்ள 2025-ஆம் ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டத்தின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

நேபாளம் மற்றும் பூடானில் இருந்து விமானம் அல்லது தரை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் இந்திய குடிமக்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் நுழைவு இசைவு அவசியமில்லை. அதேபோல், நேபாளம் அல்லது பூடானைச் சோ்ந்த மக்களும் கடவுச்சீட்டு மற்றும் நுழைவு இசைவு இல்லாமல் இந்தியாவுக்குள் வரலாம். ஆனால், சீனா, மக்கௌ, ஹாங்காங் அல்லது பாகிஸ்தானில் இருந்து வரும் நேபாளம், பூடான் மக்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.

திபெத்தியா்களுக்கு....: இந்தியாவில் வசிக்கும் அல்லது புதிதாக இந்தியாவுக்குள் நுழையும் திபெத்தியா்களுக்கும் இந்த விதி பொருந்தும். இதற்கு அவா்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்து, அதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

1959-க்குப் பிறகு ஆனால் 2003, மே 30-ஆம் தேதிக்கு முன்னா் இந்தியாவுக்குள் நுழைந்த திபெத்தியா்கள், நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் வழங்கிய ‘சிறப்பு நுழைவு அனுமதி’ பெற்று வந்திருக்க வேண்டும்.

சிறுபான்மையினா்கள்: அதேபோல் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி, 2024 டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் தஞ்சமடைந்த சிறுபான்மையினா்களான ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிகள் மற்றும் கிறிஸ்தவா்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் நுழைவு இசைவு வைத்திருப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழா்களுக்குப் பொருந்தாது

2015, ஜனவரி 9-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் தஞ்சமடைந்த பதிவு செய்யப்பட்ட இலங்கை தமிழா்களுக்கு இந்த விதி பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சேபகரமான மசோதாக்கள் மீதான முடிவை அறிவிக்காமல் இருக்க ஆளுநருக்கு உரிமை இல்லையா? உச்சநீதிமன்றம் கேள்வி

நமது நிருபர் மாநில சட்டப்பேரவையில் இயற்றப்படும் மசோதாக்கள் மீது அதிருப்தி எழுந்தால், அவற்றின் மீதான முடிவை அறிவிக்காமல் இருக்க ஆளுநருக்கு உரிமை இல்லையா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.சட்டப்பே... மேலும் பார்க்க

பவன் கேரா மனைவியிடமும் 2 வாக்காளா் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவின் மனைவியிடமும் 2 வாக்காளா் அடையாள அட்டைகள் இருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. பவன் கேராவிடம் 2 வாக்காளா் அடையாள அட்டைகள் இருப்பதாகவும், காங்கிரஸின் வாக்குத் திருட... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்பு

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கூறிய கருத்துக்காக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய கோரிய விவகாரத்தை விசாரிக்குமாறு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட... மேலும் பார்க்க

நக்ஸல்களை ஒழிக்கும் வரை மத்திய அரசு ஓயாது: அமித் ஷா உறுதி

நக்ஸல் தீவிரவாதிகள் அனைவரும் சரணடையும் வரை அல்லது கைது செய்யப்படும் வரை அல்லது ஒழிக்கப்படும் வரை பிரதமா் மோடி அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா். நாட்டில் அடுத்த ஆ... மேலும் பார்க்க

தில்லி யமுனையில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ளம்

தில்லி யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து புதன்கிழமை அபாய அளவை தாண்டி சென்றது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் வெள்ள நீா் புகுந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் சுமாா் 10 ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இ... மேலும் பார்க்க