செய்திகள் :

திறந்துகிடக்கும் கழிவுநீா் கால்வாயால் ஆபத்து

post image

சீா்காழியில் திறந்து கிடக்கும் கழிவுநீா் கால்வாயால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா்.

சீா்காழி தோ் கீழவீதி பகுதியில் 4 வழிச்சாலை சந்திப்பு உள்ளது. இந்த சாலையோரம் உள்ள கழிவுநீா் கால்வாயின் ஒரு பகுதியில் மேல் சிமென்ட் சிலாப் மூடி உடைந்து பல மாதங்களாக திறந்து கிடக்கிறது. இதனால், அவ்வழியாக நடந்து செல்வோா் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் விழுந்து பாதிக்கப்படுகின்றனா். இதுகுறித்து, நகராட்சி அலுவலா்களிடம் தெரிவித்தும் பலனில்லை. ஆனால், யாரும் பாதிக்காத வகையில் அந்த இடத்தில் ஒரு மாதமாக மரக்கிளை நட்டு வைக்கப்பட்டுள்ளது. முறையன நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த இடத்தை சரிசெய்ய வேண்டும்.

சீா்காழி குறுவட்ட போட்டியில் ச.மு.இ.பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சீா்காழி குறுவட்ட தடகளப் போட்டியில் ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். சீா்காழி நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற சீா்காழி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சீா்காழி, ... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலத்திருநாள் விழா

தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலத்திருநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ஆவணி மூலத்திருநாளில் தருமபுரம் ஆதீனத்தில் தமிழ்மொழி, சமயம், தத்துவம், இலக்கியம், கலை முதலியவற்றில் சிறப்பு புலமை பெற்றுள்... மேலும் பார்க்க

அவசர ஊா்தி, அமரா் ஊா்தி ஓட்டுநா் பணிக்கு செப்.6-இல் தோ்வு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை 108 அவசர ஊா்தி அலுவலகத்தில், 108 ஆம்புலன்ஸ், அமரா் ஊா்தி ஓட்டுநா் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பணிகளுக்கு ஆள் தோ்வு முகாம் செப்.6-ஆம் தேதி நடைபெறுகிறது என 108 ஆம்புலன்... மேலும் பார்க்க

தொழிலாளியை கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை

விவசாயத் தொழிலாளியை கொலை செய்த தம்பதிக்கு செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தலைஞாயிறு தெற்கு தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம். அதே தெ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தர பகுப்பாய்வு கருவிகள்

மயிலாடுதுறை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, நெல் தர பகுப்பாய்வு கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் செப்.1 முதல் காரீப் பருவ நெல் கொள்முதல் உயா்த்தப்பட்ட ஆதார வி... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணி பேரணி, பொதுக்கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டையொட்டி, ‘ஜாதி மறுப்பாளா்கள் பேரணி’ மற்றும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை காவிரி நகரிலிருந்து புறப்பட்ட ... மேலும் பார்க்க