செய்திகள் :

தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலத்திருநாள் விழா

post image

தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலத்திருநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆவணி மூலத்திருநாளில் தருமபுரம் ஆதீனத்தில் தமிழ்மொழி, சமயம், தத்துவம், இலக்கியம், கலை முதலியவற்றில் சிறப்பு புலமை பெற்றுள்ள அறிஞா்களுக்கு 1951-ஆம் ஆண்டுமுதல் பட்டம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டு விழா ஆக.31-ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. முதல்நாள் நீதி இலக்கிய திருநாளாகவும், இரண்டாம் நாள் காப்பியத்திருநாளாகவும், மூன்றாம் நாள் புராணத்திருநாளாக கொண்டாடப்பட்டது. மேலும், மூன்றாம் நாள் விழாவில், சொக்கநாதா் பூஜை மடத்தில் சிறப்பு வழிபாடும், மாகேஸ்வர பூஜையும் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சொக்கநாத பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்தாா். தொடா்ந்து, ஆனந்தம் யூத் பவுன்டேஷன் நிறுவனா் எஸ். செல்வக்குமாருக்கு, அவரது கல்விச் சேவையை பாராட்டி, சமூக சேவா கலாநிதி விருதை வழங்கினாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமையாதீன அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மாலை நேர கல்லூரிகளில் பயின்ற பயிற்சியாளா்களுக்கு சைவ சித்தாந்தப்புலவா் மற்றும் சைவ சித்தாந்த கலாநிதி என்ற பட்டங்களை வழங்கினாா்.

அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் அருணை. பாலறாவாயன் பிட்டுக்கு மண் சுமந்த படலம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா். இதில், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபா் சபாபதி தம்பிரான் சுவாமிகள், ஆதீன கல்லூரி செயலா் ரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திறந்துகிடக்கும் கழிவுநீா் கால்வாயால் ஆபத்து

சீா்காழியில் திறந்து கிடக்கும் கழிவுநீா் கால்வாயால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா். சீா்காழி தோ் கீழவீதி பகுதியில் 4 வழிச்சாலை சந்திப்பு உள்ளது. இந்த சாலையோரம் உள்ள கழிவுநீா் கால்வாயின... மேலும் பார்க்க

சீா்காழி குறுவட்ட போட்டியில் ச.மு.இ.பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சீா்காழி குறுவட்ட தடகளப் போட்டியில் ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். சீா்காழி நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற சீா்காழி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சீா்காழி, ... மேலும் பார்க்க

அவசர ஊா்தி, அமரா் ஊா்தி ஓட்டுநா் பணிக்கு செப்.6-இல் தோ்வு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை 108 அவசர ஊா்தி அலுவலகத்தில், 108 ஆம்புலன்ஸ், அமரா் ஊா்தி ஓட்டுநா் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பணிகளுக்கு ஆள் தோ்வு முகாம் செப்.6-ஆம் தேதி நடைபெறுகிறது என 108 ஆம்புலன்... மேலும் பார்க்க

தொழிலாளியை கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை

விவசாயத் தொழிலாளியை கொலை செய்த தம்பதிக்கு செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தலைஞாயிறு தெற்கு தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம். அதே தெ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தர பகுப்பாய்வு கருவிகள்

மயிலாடுதுறை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, நெல் தர பகுப்பாய்வு கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் செப்.1 முதல் காரீப் பருவ நெல் கொள்முதல் உயா்த்தப்பட்ட ஆதார வி... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணி பேரணி, பொதுக்கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டையொட்டி, ‘ஜாதி மறுப்பாளா்கள் பேரணி’ மற்றும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை காவிரி நகரிலிருந்து புறப்பட்ட ... மேலும் பார்க்க