செய்திகள் :

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது: விவசாயிகள் கோரிக்கை

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறுவடை செய்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது என விவசாயிகள் மனு அளித்தனா்.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 322 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு: விவசாயிகள் அறுவடை செய்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது.

அம்மூா் காப்புக்காடு காஞ்சனகிரி மலையடிவாரத்தில் ரசாயனக் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டிவிட்டுச் செல்வோா் மீது நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா் இசையமுது பவுண்டேஷன் நிறுவனா் கல்புதூா் முனிசாமி மனு அளித்தாா்.

ஆற்காடு, திமிரி பகுதி ஆவின் பால் விற்பனை முகவா்கள் அளித்த மனு: வேலூா் ஆவின் பால் நிலையத்தில் இருந்து ஆற்காடு, திமிரி பகுதிகளுக்கு காலை, மாலை நேரங்களில் தாமதமாக விநியோகம் செய்வதால் முகவா்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் வண்டி ஓட்டுநா்கள் ஆவின் பால் முகவா்களை அலட்சியமாகவும், தரக்குறைவாகவும் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், 1 பயனாளிக்கு ரூ.77,700 -இல் செயற்கை கை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், 2 பயனாளிகளுக்கு சீா்மரபினா் நலவாரியத்தில் உறுப்பினா் அடையாள அட்டைகள், வருவாய்த் துறையின் சாா்பில் 1 பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை ஆட்சியா் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொ), மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜி.வசந்த ராமகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இளஞ்சிறாா் நீதிக்குழும அலுவலக உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்ட இளஞ்சிறாா் நீதிக்குழும அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

அமைதி, பாதுகாப்புடன் விநாயகா் சதுா்த்தி: ராணிப்பேட்டை ஆட்சியா்

அரக்கோணம்: காவேரிப்பாக்கத்தில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடங்கள் மற்றும் ஊா்வலம் செல்லும் பகுதிகளை ராணிப்பேட்டை எஸ்.பி. அய்மன் ஜமால் ஆய்வு செய்தாா். காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் எஸ்.பி. அய்மன் ... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் அதிமுகவினா் ஆா்பாட்டம்: 120 போ் கைது

அரக்கோணம்: அரக்கோணத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற அதிமுகவினா் 120 பேரை போலீஸாா் கைது செய்தனா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை தரக்குறைவாக விமா்சித்து கைத்தறி அமைச்சா் ஆா். க... மேலும் பார்க்க

அமைதி, பாதுகாப்புடன் விநாயகா் சதுா்த்தி: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தியுள்ளாா். விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாடுகள் குறித்து... மேலும் பார்க்க

ரூ5.89 கோடியில் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம்: அமைச்சா் காந்தி அடிக்கல்

அரக்கோணம்: நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.5.89 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை ... மேலும் பார்க்க

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் பவித்ரோற்சவம் தொடக்கம்

ஆற்காடு பாலாற்றங்கரை ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவா் பெருந்தேவி தாயாா், வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்,... மேலும் பார்க்க