செய்திகள் :

நைஜீரியாவில் தற்கொலைப் படைத் தாக்குதல்! 10 பேர் பலி!

post image

நைஜீரியாவின் வடக்கிழக்கு மாநிலத்திலுள்ள உணவகத்தில் தற்கொலைப் படை குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொர்னோ மாநிலத்தின் கொண்டூங்கா பகுதியில், நேற்று (ஜூன் 20) மாலை வெடிகுண்டு கட்டி வந்த அடையாளம் தெரியாத நபர் அதை வெடிக்கச் செய்ததில், 10 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதிகளில், பெரும்பாலான தாக்குதல்களை போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் நடத்தி வருகின்றன.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நைஜீரியாவைச் சேர்ந்த இஸ்லாமிய கிளர்ச்சியாளர் அமைப்பான போகோ ஹராம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் அந்நாட்டின் பல முக்கிய நகரங்களை அச்சுறுத்தி வருகின்றது.

இதனால், அந்நாட்டில் சுமார் 35,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 20 லட்சத்துக்கும் மேலான மக்கள் இடமாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மைக்கு 1,800 பேர் பலி!

ஈரானில் இருந்து நேபாள நாட்டினர் மீட்பு: இந்தியாவுக்கு நேபாள அரசு நன்றி!

ஈரானில் உள்ள குடிமக்களை மீட்கும் இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கைக்கு நேபாள அரசு நன்றி தெரிவித்துள்ளது.ஈரானில் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து முதல் கட்டமாக... மேலும் பார்க்க

சிரியா முன்னாள் அதிபரின் உறவினர் கைது!

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் - அஸாத்தின் உறவுக்கார சகோதரர், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சிரியா முன்னாள் அதிபர் பஷார் அல்-அஸாத்தின் உறவினரான, வாசிம் படி அஸாத் என்பவர் போதைப்... மேலும் பார்க்க

ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மைக்கு 1,800 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 2024-ம் ஆண்டு துவங்கியது முதல் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டு 1,800-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் நோய் கட்டுபாடு மற்றும் தடுப்... மேலும் பார்க்க

காஸாவில் ரியல் ஸ்குவிட் கேம்! உணவுக்காக உயிரிழக்கும் மக்கள்!

காஸாவில் உணவுக்காக குழுமும் மக்களிடமும் இரக்கம் காட்ட மறுக்கும் இஸ்ரேல் நடவடிக்கைகள், உலக நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாத நிலையில், தீவிர த... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு - பாகிஸ்தான் அரசு பரிந்துரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான போர... மேலும் பார்க்க

எனக்கு 4 அல்லது 5 முறை நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும்! - டிரம்ப் ஆதங்கம்

அமைதிக்கான நோபல் பரிசை தான் 4 அல்லது 5 முறை பெற்றிருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு சந்தர்ப்பங்கள... மேலும் பார்க்க