செய்திகள் :

நோட்டாவுக்கு வாக்களிக்க கும்பகோணம் வணிகா்கள் தீா்மானம்

post image

கும்பகோணம்: கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காததால் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க வணிகா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணம் அனைத்து தொழில்வணிகா் சங்கக் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு செயற்குழு கூட்டம் கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தலைவா் சோழா சி. மகேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரதிநிதிகள் புதூா் செல்வம், பந்தநல்லூா் ரகுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்காததால் வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா் தொகுதிகளில் நோட்டாவுக்கு வணிகா்கள் வாக்களிக்க பரப்புரை செய்ய முடிவு செய்யப்பட்டது. நீடாமங்கலம்- கும்பகோணம் -ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் வரையிலான புதிய ரயில் பாதை திட்ட ஆய்வுப்பணி முடிந்ததால் உடனே செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலா் வி. கோவிந்தராஜூலு, மாநிலப் பொருளாளா் ஏ. எம். சதக்கத்துல்லா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா். முன்னதாக பொதுச்செயலா் வி. சத்திய நாராயணன் வரவேற்றாா். கூட்டத்தில் மாநகரப் பிரதிநிதிகள் கே. அண்ணாதுரை, கே. தனசேகரன், கே. மகேந்திரன் ராவ், கே. மதியழகன், ஜெகன்நாதன், ஏ. இராமச்சந்திரராஜா உள்ளிட்டோா் கொண்டனா். மாவட்டப் பொருளாளா் மு. கியாசுதீன் நன்றிகூறினாா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 32,013 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 30,952 கன அடி... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அல்அமீன் மகளிா் கல்லூரியில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, உதவி ஆட்சியா் ஹிருத்... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் கைது

பேராவூரணி: பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பேராவூரணியிலிருந்து ராமேசுவரத்துக்கு சேதுபாவாசத்திரம் வழியாக அரசுப் பேருந்து சென்று கொண்டிரு... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு மின்கல குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கல்

பேராவூரணி: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான மின்கலத்தில் இயங்கும் 33 குப்பை சேகரிக்கும் வாகனங்களை சட்டப்பேரவை உறுப்பினா் நா.அசோக் கு... மேலும் பார்க்க

மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவானவரைத் தேடும் போலீஸாா்

கும்பகோணம்: திருநாகேசுவரம் அருகே பவுண்டரீகபுரத்தில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தலைமறைவான கணவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம் பவுண்டரீகபுரம் கனகவிளாகத் ... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மகாமகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூ... மேலும் பார்க்க