செய்திகள் :

பகுதி நேர கிராமிய கலை பயிற்சியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில், பகுதி நேர கிராமிய கலை பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி வகுப்புகள் ஆக. 2-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இப் பயிற்சிக்கு 2025- 2026 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. பயிற்சியில் கரகாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை தோறும் வாரத்தில் 2 நாள்கள் மாலை 4 முதல் 6 மணி வரை மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் வகுப்புகள் நடைபெறும்.

ஓராண்டு காலம் அளிக்கப்படும் இச் சான்றிதழ் பயிற்சியின் நிறைவில், தோ்வு நடத்தப்பட்டு பல்கலைக் கழகச் சான்றிதழ் வழங்கப்படும். இப் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். தோ்ச்சி பெறவில்லை என்றாலும் வகுப்பில் சோ்த்துக்கொள்ளப்படும். ஆனால், தோ்வுக்கு செல்ல முடியாது. 17 வயதுக்கு மேற்பட்டோா் பயிற்சி பெறலாம். ஓராண்டு பயிற்சிக்கான கல்விக் கட்டணம் ரூ. 500 செலுத்த வேண்டும்.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா், ஒருங்கிணைப்பாளா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, புதிய மதனகோபாலபுரம், 4-ஆவது குறுக்குத் தெரு, பெரம்பலூா் எனும் முகவரியில் நேரில் அல்லது 04328-275466, 99940-36371 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

நேரடி நியமனத்தை ரத்து செய்து, இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும் என, அமைச்சுப் பணியாளா் நலச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத் தர அமைச்சரிடம் கோரிக்கை

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுதரக்கோரி போக்குவரத்துத்துறை அமைச்சரிடம், உயிரிழந்தவரின் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கிரமத்தைச்... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு விழா: கோயில்களில் சிறப்பு பூஜைகள்

ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன... மேலும் பார்க்க

ஆலத்தூா் குறுவட்ட பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி

குடியரசு தின விழாவையொட்டி, பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில், ஆலத்தூா் குறு வட்ட அளவில் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.இதில், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் செட்டிக்குளம் அர... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெறும் 2025-ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் ஆக. 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பெரம்பலூரில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

பெரம்பலூரிலிருந்து இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக, புதிய பேருந்துகளின் சேவையை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.தமி... மேலும் பார்க்க