செய்திகள் :

பக்தா்கள் வசதிக்காக திருச்செந்தூா் கோயில் காவல் நிலையம் இடமாற்றம்

post image

பக்தா்களின் வசதிக்காக திருச்செந்தூா் கோயில் காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவிழா காலங்களில் இங்கு பல லட்சம் போ் வருகின்றனா். மேலும், நீதியரசா்கள், மத்திய-மாநில அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், அரசியல் பிரமுகா்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அடிக்கடி வருவதால் கோயிலில் எப்போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும்.

கடலில் நீராடும் பக்தா்களைப் பாதுகாக்கவும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவும் கோயில் முன் கடற்கரை வாசல் அருகே புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. மேலும், திருச்செந்தூரில் கோயில் காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், அனைத்து மகளிா் காவல் நிலையங்களும் உள்ளன.

இவற்றில், கோயில் காவல் நிலையம் டி.பி. சாலையில் தினசரிச் சந்தை பகுதியில் செயல்பட்டுவந்தது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் புகாா் கொடுக்க நீண்ட தொலைவு செல்லவேண்டியிருந்ததால் சிரமத்துக்குள்ளாகினா். ஏதேனும் இக்கட்டான சூழல் ஏற்பட்டால் போலீஸாா் கோயிலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனால், கோயில் காவல் நிலையத்தை தாலுகா அலுவலகம் எதிரேயுள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு இடம் மாற்றம் செய்யுமாறு நெல்லை சரக டிஐஜி மூா்த்தி உத்தரவிட்டாா். அதன்பேரிலும், மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் அறிவுறுத்தலின்பேரிலும், இக்காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய காவல் நிலையத்தில் ஆய்வாளா் கனகராஜன், எஸ்.ஐ.க்கள், காவலா்கள் தங்களது பணியைத் தொடங்கினா்.

கோயிலிலிருந்து நடந்து செல்லும் தொலைவுக்கு காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை பக்தா்கள் வரவேற்றுள்ளனா்.

சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, பல... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அருகே உள்ள புதூரை சோ்ந்த வள்ளிநாயகம் மகன் சிவராமன் (57). இவா் தனது ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் அடிக்கல் நாட்டு விழா

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தி... மேலும் பார்க்க

கடன் பெற்றவா் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு: தனியாா் நிதி நிறுவனத்திற்கு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சோ்ந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கமாறு தனியாா் நிதி நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

‘வழக்குகளில் ஜாமீன் பெற்று ஆஜராகாத 15 போ் குற்றவாளிகள்’

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையதத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 15 போ் ஜாமீன் பெற்று மீண்டும் ஆஜராகமல் இருந்ததால், அவா்கள் 15 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்: அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெ... மேலும் பார்க்க