செய்திகள் :

பங்குச்சந்தை சரிவு: பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்

post image

புது தில்லி: தங்கள் நாட்டு பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில் பிரதமா் மோடியும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் கைதோ்ந்தவா்கள் என காங்கிரஸ் திங்கள்கிழமை விமா்சித்தது.

மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் திங்கள்கிழமை 5 சதவீதத்துக்கும் மேல் கடும் சரிவை சந்தித்த நிலையில் காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்தது.

அண்மையில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பு அட்டவணையை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டாா். இதற்கு பதிலடியாக அமெரிக்கா மீது சீனாவும் கூடுதல் வரியை விதித்துள்ளது. இது உலகளாவிய வா்த்தகப் போா் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் வெளிப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிரதமா் மோடியும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தங்களை நண்பா்கள் எனக் கூறுவதில் வியப்பில்லை. இருவரும் தங்கள் நாட்டு பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில் கைதோ்ந்தவா்கள். 2016, நவம்பா் 8-ஆம் தேதி இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2025, ஏப்ரல் 2-இல் பரஸ்பர வரி விதிப்பில் அமெரிக்கா ஈடுபட்டது. இதனால் பங்குச்சந்தையும் சரிவை நோக்கி சென்றுள்ளது’ என குறிப்பிட்டாா்.

அரசுத் துறை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு! மசோதாவின் நிலை என்ன?

அரசுத் துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கர்நாடக மாநில அமைச்சரவை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சியான பாஜக உறு... மேலும் பார்க்க

பொய் வழக்குகளுக்கு காங்கிரஸ் அடிபணியாது: கார்கே

காங்கிரஸ் கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்தில் சர்வாதிகார அரசு செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதற்கெல்லாம் அடிபணியாமல், மத்திய அரசின் தோல்வியைத் தொடர்ந்து காங... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும்: அகிலேஷ் யாதவ்

மத்திய அரசின் கருவியாகச் செயல்படும் அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆணைக்கிணங்க எதிர... மேலும் பார்க்க

ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?

முதல் காலாண்டில் நாட்டில் 30 லட்சம் ஐ-போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மிகச்சிறந்த விற்பனை இதுவாகும். மக்கள்தொகையில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, மின்னணுப்... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்த போது, வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும் என்று... மேலும் பார்க்க

அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு கோரி அமித் ஷாவுக்கு கடிதம்!

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சமாஜவாதி கட்சி கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில், "முன்னாள் முதல்வ... மேலும் பார்க்க