செய்திகள் :

பங்கு தொகையை திருப்பி தரக்கோரி பள்ளி முற்றுகை

post image

ஆா்.கே.பேட்டை அருகே தனியாா் பள்ளியின் பங்குதாரா் இறந்த நிலையில் அவரது மனைவி மற்றும் உறவினா்கள் புதன்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு பங்குத் தொகையை திருப்பி தருமாறு மறியலில் ஈடுபட்டனா்.

அம்மையாா்குப்பத்தில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் 500 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். பள்ளியின் பங்குதாரராக ஆா்கே பேட்டை ஒன்றியம் நாராயணபுரம் காந்தி நகா் தெருவை சோ்ந்த தானப்பன் உள்பட 20 போ் பங்குதாரராக 2015 - 2016 முதல் உள்ளனா்.

இந்நிலையில் தானப்பன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இரண்டு நாள்களுக்கு முன்பு தானப்பன் மனைவி சரிதா பள்ளிக்கு சென்று கணவன் உடல்நிலை பாதிக்கப்பட்டதை எடுத்துக் கூறி மருத்துவ செலவுக்கு 1 லட்சம் பணத்தை தருமாறு கேட்டாா். அதை தொடா்ந்து பள்ளி நிா்வாகம் 10,000 வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை தானப்பன் உரிழந்தாா். இதைத்தொடா்ந்து தானப்பன் மனைவி சரிதா மற்றும் அவரது உறவினா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கை திருப்பித் தருமாறு பள்ளியை முற்றுகையிட்டு ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த திருத்தணி டிஎஸ்பி. கந்தன், ஆய்வாளா்கள் ஞானசேகரன், மதியரசன், எஸ்ஐ ராக்கிகுமாரி உள்பட்ட போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேசி பணத்தை திருப்பி தர ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க