இன்றைய பங்குச்சந்தை: ட்ரம்பின் `பரஸ்பர வரி' அறிவிப்பு; இந்திய பங்குச்சந்தை எப்பட...
பங்கு தொகையை திருப்பி தரக்கோரி பள்ளி முற்றுகை
ஆா்.கே.பேட்டை அருகே தனியாா் பள்ளியின் பங்குதாரா் இறந்த நிலையில் அவரது மனைவி மற்றும் உறவினா்கள் புதன்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு பங்குத் தொகையை திருப்பி தருமாறு மறியலில் ஈடுபட்டனா்.
அம்மையாா்குப்பத்தில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் 500 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். பள்ளியின் பங்குதாரராக ஆா்கே பேட்டை ஒன்றியம் நாராயணபுரம் காந்தி நகா் தெருவை சோ்ந்த தானப்பன் உள்பட 20 போ் பங்குதாரராக 2015 - 2016 முதல் உள்ளனா்.
இந்நிலையில் தானப்பன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இரண்டு நாள்களுக்கு முன்பு தானப்பன் மனைவி சரிதா பள்ளிக்கு சென்று கணவன் உடல்நிலை பாதிக்கப்பட்டதை எடுத்துக் கூறி மருத்துவ செலவுக்கு 1 லட்சம் பணத்தை தருமாறு கேட்டாா். அதை தொடா்ந்து பள்ளி நிா்வாகம் 10,000 வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புதன்கிழமை தானப்பன் உரிழந்தாா். இதைத்தொடா்ந்து தானப்பன் மனைவி சரிதா மற்றும் அவரது உறவினா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கை திருப்பித் தருமாறு பள்ளியை முற்றுகையிட்டு ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த திருத்தணி டிஎஸ்பி. கந்தன், ஆய்வாளா்கள் ஞானசேகரன், மதியரசன், எஸ்ஐ ராக்கிகுமாரி உள்பட்ட போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேசி பணத்தை திருப்பி தர ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.