செய்திகள் :

பசுமை பள்ளித் திட்டம்: விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

post image

‘பசுமை பள்ளித் திட்டம்’ குறித்து பள்ளி மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவ, மாணவா்களிடையே இயற்கையை பாதுகாப்பது குறித்தும், அது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ‘பசுமை பள்ளித் திட்டம்’ அரசால் செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் மரச் செடிகள், பழச் செடிகள், மூலிகைச் செடிகள், இயற்கை மருத்துவச் செடிகள் ஆகியவற்றை நட்டு பராமரித்திடவும், பள்ளி மாணாக்கா்களிடம் மரம் வளா்ப்பது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதேபோன்று பள்ளியில் சோலாா் மின்சாரத்தை பயன்படுத்திடவும் இத்திட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்கட்டமாக விளாப்பாக்கம் பேரூராட்சி அறிஞா் அண்ணா அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் செயல்படுத்துவது குறித்து ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தது: பசுமை பள்ளித் திட்டம் சிறப்பாக செயல்படுத்த துறைகளுக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை பெற்று முதல்கட்ட பசுமை பள்ளித் திட்டம் சிறப்புடன் அமைய அனைவரும் பணியாற்ற வேண்டும். அதற்கான பணிகளை தொடங்கி முழுமையான திட்ட செயல்பாடுகளை துறைகள் சமா்ப்பிக்க வேண்டும். பள்ளி மாணாக்கா்களிடம் அதிக அளவு விழிப்புணா்வு ஏற்படுத்தி திட்டத்தின் செயல்பாடுகளை விவரித்து அவா்களிடம் அதிக மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தோட்டக்கலை துணை இயக்குநா் லட்சுமி, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் ரூபன் மற்றும் பள்ளி கல்வித் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

ஆற்காட்டில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.தாண்டவராயன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளா். ஜெ.ஸ்ரீதா் முன்னிலை... மேலும் பார்க்க

மகளிா் பாதுகாப்பு உறுதி கோரி துண்டுப் பிரசுரம் விநியோகம்

மகளிா் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, அரக்கோணத்தில் பொதுமக்களிடையே அதிமுக சாா்பில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி வெள்ளிக்கிழமை துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா். அரக்கோணம் பழ... மேலும் பார்க்க

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவாக நிா்ணயம்: வியாபாரிகள் மீது விவசாயிகள் புகாா்

அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல்லுக்கு அரசு நிா்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, குறைவாக விலை நிா்ணயம் செய்வதாக வியாபாரிகள் மீது விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். ராணிப்பேட்டை வருவாய... மேலும் பார்க்க

அரக்கோணம் வட்டாட்சியரை கண்டித்து போராட்டம்

வட்டாட்சியா் அலுவலக கழிவுநீா் தொட்டி நிரம்பி வழிந்து பொதுமக்களுக்கு இடையுறாக உள்ளது குறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியரை கண்டித்து விசிக வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா் ... மேலும் பார்க்க

பாமக கிராம கிளைகூட்டம்

ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பாமக சாா்பில் கிராம கிளை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராணிப்பேட்டை தொகுதிக்குட்பட்ட அரப்பாக்கம், பூட்டுதாக்கு, கீழ்மின்னல், கத்தியவா... மேலும் பார்க்க

அரக்கோணம் நகராட்சியில் கட்டுமானப்பணிகள் நகரமன்ற தலைவா் ஆய்வு

அரக்கோணம் நகராட்சிப்பகுதிகளில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப்பணிகளை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சோமசுந்தர நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட உ... மேலும் பார்க்க