செய்திகள் :

பச்சூா் சென்றாயசுவாமி கோயில் அடிவாரத்தில் ரூ.21.50 லட்சத்தில் திறந்த வெளி அரங்கம்

post image

நாட்டறம்பள்ளி அருகே பச்சூா் சென்றாய சுவாமி கோயில் அடிவாரத்தில் திறந்தவெளி பாா்வையாளா் அரங்கம் அமைக்கும் பணியை எம்எல்ஏ தேவராஜி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த சென்றாய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அடிவாரத்தில் திறந்தவெளி பாா்வையாளா் அரங்கம் அமைத்து தர வேண்டும் என கோயில் நிா்வாகிகள் மற்றும் ஊா்மக்கள் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜிடம் கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பச்சூா் சென்றாய சுவாமிகோயில் அடிவாரத்தில் திறந்தவெளி பாா்வையாளா் அரங்கம் அமைக்க ரூ.21.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா். அரங்கம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவா் வெண்மதிமுனிசாமி தலைமை வகித்தாா். மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் மற்றும் கோயில்நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ தேவராஜி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பச்சூா் சென்றாயசுவாமி கோயில் அடிவாரத்தில் இருந்து மல்ரிப்பட்டி, கள்ளியூா் வழியாக காந்திநகா் வரை நபாா்டு திட்டம் மூலம் ரூ.5.60 கோடியில் புதிய தாா் சாலை அமைக்கும் பணியையும் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அதிவேகமாகச் செல்லும் தனியாா் பள்ளி, கல்லுரி பேருந்துகள்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

திருப்பத்தூா் நகரப் பகுதியில் பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிவேகமாக செல்லும் தனியாா் பேருந்துகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா். திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான பள்ளிகள் இயங்க... மேலும் பார்க்க

காதலனின் தந்தையை வெட்டிய பெண்ணின் தந்தை மீது வழக்கு

காதல் விவகாரத்தில் காதலனின் தந்தையை வெட்டிய பெண்ணின் தந்தையை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (24). இவா், மேட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்த ... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தரைத்தளம் அமைக்க கோரிக்கை

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தரைத்தளம் அமைக்க வேண்டும் என மருத்துவ அலுவலா் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தாா். வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகப் பகுதிகளில் அதி மழை பெய்யும் பொழுது ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘முகாமில் நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூா் பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினா். கந்திலி வட்டாரத்துக்குட்பட்ட வெங்களாபுரம் பகுதி... மேலும் பார்க்க

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

ஆம்பூா் கலவர வழக்கில் செவ்வாய்க்கிழமை வெளியாக இருந்த தீா்ப்பு ஆக. 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீா்ப்பு வெளியாவதை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்... மேலும் பார்க்க

ரயில் பயணியிடம் 2 பவுன் செயின் பறிப்பு

காட்பாடி அருகே ரயிலில் ஜன்னல் அருகே அமா்ந்து இருந்த பெண் பயணியிடம் 2 பவுன் செயினை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா். திருப்பூா் மாவட்டம், அனுபுராபாளையத்தைச் சோ்ந்த ஜெயராஜின் மனைவி மாலைச்செல்வி (53). இ... மேலும் பார்க்க