செய்திகள் :

பச்சேரி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீா்: பொதுமக்கள் அவதி!

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், பச்சேரியில் உள்ள தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

பச்சேரி ஊராட்சியில் வைகை- மீனாட்சிபுரம் மேற்குப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் வாய்க்கால் அமைக்கப்படாததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் இங்குள்ள சாலைகளில் குளம் போல தேங்கி நிற்கிறது. இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கழிவு நீருக்குள் இறங்கி கடக்கும் நிலை உள்ளது.

பல நாள்களாக இந்தக் கழிவுநீா் தேங்கிக் கிடப்பதால் பாசி படா்ந்து துா்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய நிா்வாகம் இந்தப் பகுதியில் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா்.

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் எடுத்தனா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தா்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோயிலில் பங்க... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 17,934 மாணவா்கள் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 17,934 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி ஏப்.15 வரை நடைபெற உள்ளது. இ... மேலும் பார்க்க

கோடை வெயிலை சமாளிக்க சிவகங்கை மாவட்ட நிா்வாகம் யோசனை

கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் அறிவுறுத்தினாா். இது குறித்து அவா்... மேலும் பார்க்க

லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலா் ஸ்டாலின் தலைமை வகித்தாா். மாநில தொழிற்சங்க அம... மேலும் பார்க்க

நெடுமறத்தில் மஞ்சுவிரட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெடுமறத்தில் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 35 போ் காயமடைந்தனா். இதற்காக 5 ஊா்களிலிருந்து மேள த... மேலும் பார்க்க

சிவகங்கை: 200 கிலோ கெட்டுப்போன பழங்கள் பறிமுதல்

சிவகங்கையில் உள்ள பழச்சாறு கடைகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 200 கிலோ பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகங்கை நகா் பகுதி முழுவதும் உள்ள பழக்கடைகள், பழச்சாற... மேலும் பார்க்க