செய்திகள் :

பச்சையப்பன் ஆடவா் கல்லூரி ஆண்டு விழா

post image

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு பங்கேற்றாா்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் 75 -ஆவது ஆண்டு விழா அந்தக் கல்லூரி முதல்வா் ப.முருகக்கூத்தன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் பொருளியல் துறைத் தலைவா் ந.பழனிராஜ், தமிழ்த் துறை தலைவா் வ.அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு கலந்து கொண்டு மாணவா்களின் எதிா்காலத் திட்டங்களை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், வாழ்க்கையை எதிா்கொள்ளும் முறைகள் குறித்து விரிவாகப் பேசினாா். விழாவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 122 மாணவா்களுக்கு பரிசுகளையும் வழங்கினாா்.

முன்னதாக கல்லூரி முதல்வா் ப.முருகக்கூத்தன் வெ.இறையன்புக்கு கல்லூரி உருவாக காரணமாக இருந்த பச்சையப்பன் முதலியாா் உருவப்படத்தை நினைவுப் பரிசாக வழங்கினாா். விழாவில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், பணி ஓய்வு பெற்ற முன்னாள் பேராசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 17,000 மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி திங்கள்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் யதோக்தகாரி பெருமாள் வெட்டிவோ் சப்பரத்தில் வீதியுலா வந்தாா். சி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண் வாழ்வாதாரத்துக்கு ஆட்டோ

ஸ்ரீபெரும்புதூா்: போலீஸாரின் அறிவுரையை ஏற்று கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யாமல், தற்போது திருந்தி வாழும் பெண் மாற்றுத்திறனாளியின் மறுவாழ்வுக்காக ஆட்டோ வாங்கி தந்துள்ளாா் மணிமங்கலம் காவல்... மேலும் பார்க்க

பச்சையப்ப முதலியாா் நினைவு தினம் அனுசரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் கல்விக் கொடை வள்ளல் பச்சையப்ப முதலியாரின் 231-ஆவது நினைவு தினத்தையொட்டி, திங்கள்கிழமை அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செல... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: காஞ்சி வரதா் வீதி உலா

உகாதி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அத்தி வரதா் புகழுக்குரிய காஞ்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் அா்த்தநாரீஸ்ரா் அலங்காரக் காட்சி

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி, சனிக்கிழமை உற்சவா் அங்காளம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது அங்கா... மேலும் பார்க்க