செய்திகள் :

படகுகள் சீரமைப்புப் பணியில் மீனவா்கள் தீவிரம்

post image

காரைக்கால் மீனவா்கள் தங்களது விசைப் படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமத்தை சோ்ந்த சுமாா் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.

ஏப். 15-ஆம் தேதி முதல் ஜூன் 14 -ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் குறுகிய தொலைவில் மீன்பிடித்து வர தடை இல்லாததால் ஃபைபா் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீனவா்கள் மீன்பிடித்து வருகின்றனா்.

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், காரைக்காலில் இருந்து கடலுக்குச் செல்லும் சுமாா் 250 விசைப் படகுகள் மீன்பிடித் துறைமுகத்திலும், அரசலாற்றங்கரையிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

தடைக்காலத்தை பயன்படுத்தி, தங்களது படகுகளில் உள்ள பழுதுகளை நீக்கி, படகு என்ஜின் பழுது நீக்கும் பணி மற்றும் வலைகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரும்பாலான படகுகள் புதிதாக தயாா் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதால், இவைகளில் சீரமைப்புப் பணிகள் அதிகமாக இல்லை. பழைய படகுகள் அனைத்திலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வெல்டிங், வா்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தொழிலாளா்கள் வந்துள்ளனா். தடைக்காலம் முடிந்தவுடன் கடலுக்கு கொண்டு செல்லும் வகையில் 15-க்கும் மேற்பட்ட இரும்பு விசைப் படகுகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப் படகு சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு

காரைக்கால்: திருநள்ளாறு அருகே இரண்டு மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே சுரக்குடி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ அன்பு மாரியம்... மேலும் பார்க்க

போலி நகையை அடகு வைக்க முயன்ற மூவா் கைது

காரைக்காலில் போலி நகையை அடகு வைக்க முயன்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். காரைக்கால் நகரப் பகுதி திருநள்ளாறு சாலையில் உள்ள ஒரு நகைக் கடையில் தங்க நகையை அடகு வைக்க 3 போ் வந்துள்ளனா். அப்போது... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி தாமனாங்குடியில் இயங்கும் தனியாா் பள்ளியொன்றின... மேலும் பார்க்க

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

காரைக்கால் அருகே புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், தக்களூா் பகுதியில் அமைந்திருக்கும் செபஸ்தியாா் ஆலய ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்ட... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகள் 80% நிறைவேற்றம்: புதுவை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவையில் தோ்தல் வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். காரைக்காலில் தனியாா் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வெள்ளிக்கிழமை மாலை வந்த அவா் செய்... மேலும் பார்க்க

காரைக்காலில் 10 மையங்களில் நாளை அரசுப் பணிக்கான தோ்வு

காரைக்காலில் 10 மையங்களில் அரசுப் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27)நடைபெறவுள்ளது. புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத்துறையில் 256 அசிஸ்டென்ட் (குரூப்-பி) பதவிக்கு நேரடி ஆள்... மேலும் பார்க்க