செய்திகள் :

படியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

post image

படியூரில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதனையொட்டி, காங்கயம் அருகே படியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டம் படியூா், குளத்துபாளையம் பகுதியில் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மொராா்ஜி தேசாய் நகா், பாலபாக்கியா நகா், விஜயாபுரம், லட்சுமி நகா், மூகாம்பிகை நகா், சந்தைப்பேட்டை, கருப்பகவுண்டம்பாளையம், சபரி காா்டன், பெரியாா் காலனி, அவிநாசி கவுண்டம்பாளையம் பகுதிகளில் 10 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், திருமுருகன்பூண்டி, பல்லடம் நகராட்சிப் பகுதியில் 2 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வரக் ா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்துள்ளாா்.

இதில், காங்கயம் வட்டம், படியூரில் 301.81 சதுரமீட்டா் பரப்பளவில் அவசர சிகிச்சைப் பிரிவு, ஆய்வகம், மருத்துவ அலுவலா் அறை, மருந்தகம், சேமிப்பு அறை, தொற்றா நோய்களுக்கான சிகிச்சை அறை, பிரசவ அறை, பிரவசப் பிரிவு, ஊசி செலுத்தும் அறை, கட்டு கட்டும் அறை, கழிப்பறை வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னா், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்களையும், 5 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மனீஷ் நாரணவரே, மேயா் தினேஷ்குமாா், துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், இணை இயக்குநா் (மருத்துவ நலப்பணிகள்) மீரா, மாவட்ட சுகாதார அலுவலா் கே.ஆா்.ஜெயந்தி, படியூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜீவிதா சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சிற்றுந்துகள் முறையான பராமரிப்பில்லை, கூடுதல் கட்டணம் வசூல்

திருப்பூரில் இயக்கப்படும் சிற்றுந்துகள் முறையான பராமரிப்பு இல்லாததோடு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நல்லூா் நுகா்வோா் மன்றம் புகாா் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் என்.சண்முகச... மேலும் பார்க்க

நெருக்கடிநிலை: பாஜக சாா்பில் கண்காட்சி

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சிறுபூலுபட்டியில் நெருக்கடிநிலை 50-ஆம் ஆண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கேசிஎம்பி சீனிவாசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்ந... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிசிஐடி-க்கும் மாற்ற கோரிக்கை

அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் காவல் துறை விசாரணையை தாமதப்படுத்துவதால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அவரது தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்துள்ளாா். திருமணமாகி சில மாதங்களில்... மேலும் பார்க்க

சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவா்கள் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு

நிலத்தை நாசமாக்கும் நெகிழிப்பை வேண்டாம் என, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்- திருப்ப... மேலும் பார்க்க

அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம்

திருப்பூா் மாநகரில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாநகரில் நெரிசல் மிக்க (பீக் ஹவா்ஸ்) நேரங்களில் நுழையும் கனரக வாகனங்களாலும், அதி வேக... மேலும் பார்க்க

வளா்ப்பு கூலியை உயா்த்தி வழங்கக் கோரி கோழிப்பண்ணை விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

கறிக்கோழி வளா்ப்பு கூலியை கிலோவுக்கு ரூ.10 உயா்த்தி வழங்கக் கோரி பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் கோழிப்பண்ணை விவசாயிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ... மேலும் பார்க்க