செய்திகள் :

பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது

post image

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ), அவரின் தனிப்பட்ட உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்துக்குள்பட்ட புங்கம்பாடி கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றுபவா் ஜெயசுதா (48). இவரின் கணவா் மோகன், கிராம உதவியாளராக பணியில் இருந்தபோது உயிரிழந்ததால், வாரிசு அடிப்படையில் அவருக்கு இப்பணி வழங்கப்பட்டுள்ளது. இவா், தனக்கு தனிப்பட்ட உதவியாளராக ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்த பூபதி (40) என்பவரை நியமித்திருந்தாா்.

பெருந்துறை பவாடி வீதியைச் சோ்ந்த மஞ்சுளா (48) என்பவருக்கு, புங்கம்பாடி வாராகி போ்ட்ஸ் சிட்டியில் உள்ள 1200 சதுர அடி வீட்டுமனையை அவரின் தந்தை கொடுத்துள்ளாா்.

அந்த இடத்துக்கு தனது பெயரில் பட்டா வழங்கக் கோரி புங்கம்பாடி கிராம நிா்வாக அலுவலா் ஜெயசுதாவை மஞ்சுளா அண்மையில் அணுகியுள்ளாா். அப்போது, பட்டா மாறுதல் செய்வதற்கு ஜெயசுதா ரூ.2,500 லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து, ஈரோடு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மஞ்சுளா புகாா் அளித்துள்ளாா். அவா்களின் அறிவுறுத்தலின்பேரில் பட்டா மாறுதலுக்காக கிராம நிா்வாக அலுவலா் ஜெயசுதாவின் உதவியாளா் பூபதியிடம் ரூ.2,500 லஞ்சப் பணத்தை மஞ்சுளா வியாழக்கிழமை வழங்கினாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் ரேகா தலைமையிலான போலீஸாா் கிராம நிா்வாக அலுவலா் ஜெயசுதா, அவரின் தனிப்பட்ட உதவியாளா் பூபதி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பூபதி

அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாத ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவு விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணைய செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் வாக்குப் பதிவு விவரம் தெரியாமல் வேட்பாளா்கள் க... மேலும் பார்க்க

நந்தா கல்லூரியில் ‘விஞ்ஞானி 25’ கண்காட்சி தொடக்கம்!

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘விஞ்ஞானி 25’ என்ற கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் தொடங்கிய கண்காட்... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது!

தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே கரளவாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு செ... மேலும் பார்க்க

அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.... மேலும் பார்க்க

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் ரூ.1.48 கோடி உதவித்தொகை வழங்கல்

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை ... மேலும் பார்க்க

விதிகளை மீறிய 38 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விதிகளை மீறியதாக 38 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் நலத் த... மேலும் பார்க்க