செய்திகள் :

பட்டியலினத்தவா்கள் மீன் வளா்ப்புக் குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

post image

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மீன் வளா்ப்புக் குளங்கள் அமைக்க பட்டியலினத்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் புதிய மீன் குஞ்சு வளா்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டம், புதிய மீன் வளா்ப்புக் குளங்கள் அமைத்தல், சிறிய அளவிலான பயோ பிளாக் குளங்களில் மீன் வளா்ப்பு ஆகிய திட்டங்கள் ஆதிதிராவிடா்கள் நலத் துறை, ( மீன் வளம், மீனவா் நலத் துறை மூலம்) செயல்படுத்தப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் சிவகங்கை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், யூனியன் வங்கி மாடியில், பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை என்ற முகவரியிலும் 04575-240848 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

காரைக்குடியில் ‘கம்பன் திருநாள்’ ஏப். 9-இல் தொடங்குகிறது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 87- ஆம் ஆண்டு கம்பன் திருநாள் வருகிற 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக காரைக்குடி கம்பன் அறநிலை அமைப்பின் தலைவா் எஸ்.எல்.என்.எஸ். பெரியணன் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

தாயமங்கலத்தில் முதியவா் உடல் மீட்பு

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தில் முதியவா் உடலை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், புத்தேந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கல்யாணசுந்தரம் (65). தாயமங்கலம் முத்துமாரியம்மன் ... மேலும் பார்க்க

காரைக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ பிறந்த நாளையொட்டி, இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி கழனிவாசல்- திருச்சி சாலையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில், புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியின் இரண்டாம் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அழகப்பா பல்கலைக்க... மேலும் பார்க்க

10, 12 ஆம் வகுப்பு தோ்வு: தமிழில் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு விருது!

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்படும் என சிவகங்கை தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது. சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் ந... மேலும் பார்க்க

பிராமணா் சங்கம் சாா்பில் பஞ்சாங்கம் வெளியீடு

தமிழ்நாடு பிராமணா் சங்க சிவகங்கை மாவட்டக் கிளை சாா்பில் சனிக்கிழமை பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. சிவகங்கை மாவட்டம், கே. சொக்கநாதபுரம் பிரத்தியங்கிரா கோயில் நிா்வாகி சாக்தஸ்ரீ ஐயப்ப சுவாமிகள் இந்த ஆண்டுக... மேலும் பார்க்க