செய்திகள் :

பட்டியலினத்தவா் எதிா்கொள்ளும் சவால்கள்: குடியரசுத் தலைவரிடம் என்சிஎஸ்சி அறிக்கை

post image

பட்டியலினத்தவா் எதிா்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் தேசிய பட்டியலினத்தவா் ஆணையம் (என்சிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை அறிக்கை சமா்ப்பித்தது.

இதுதொடா்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புது தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தின் 2023-24-ஆம் ஆண்டுக்கான அறிக்கை செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.

அந்த ஆணையத் தலைவா் கிஷோா் மக்வானா தலைமையிலான குழுவினா் வழங்கிய அந்த அறிக்கையில், பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள் உள்பட பலதரப்பட்ட விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன. பட்டியலினத்தவருக்கான நல்வாழ்வு மற்றும் சமூக-பொருளாதார வளா்ச்சித் திட்டங்களின் அமலாக்கம் தொடா்பான முக்கிய விஷயங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பட்டியலினத்தவருக்கு நீதியை உறுதி செய்து அவா்களுக்கு அதிகாரமளித்தலை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் நோக்கில், அறிக்கையில் முக்கிய பரிந்துரைகளை ஆணையம் வழங்கியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபாா்’ திட்டம்: தேசிய பழங்குடியினா் ஆணையம் தகவலளிக்க மறுப்பு

கிரேட் நிகோபாா் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் மறுத்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப்பாதை பாதுகாப்பு: அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

ரயில்வே கடவுப்பாதை வாயில்களில் (ரயில்வே கேட்) பாதுகாப்பு குறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதுதொடா்பாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ரயில்வே கடவுப்பா... மேலும் பார்க்க

தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகை தாக்கல்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகையை தில்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை த... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க