செய்திகள் :

பட வாய்ப்புக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்ட சிறகடிக்க ஆசை நடிகை!

post image

சிறகடிக்க ஆசை தொடரில் நடித்துவரும் பாக்யஸ்ரீ என்ற பாக்கியலட்சுமி, பட வாய்ப்புகளுக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

சினிமாவுக்கு வந்த காலகட்டத்தில் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருந்ததாகவும், அதனால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில், உடல் பருமனுக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருபவர் நடிகை பாக்கியலட்சுமி. இவர் இதற்கு முன்பு கல்யாண பரிசு, கைராசி குடும்பம், அபூர்வ ராகங்கள், அழகு, நீலகுயில் உள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளார்.

1982ஆம் ஆண்டு தேவியின் திருவிளையாடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நியாயம் கேட்கிறேன், நலமறிய ஆவல், சாந்தி முகூர்த்தம், செயின் ஜெயபால், வளையல் சத்தம், ஒரே ரத்தம், தாயா தாரமா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதேபோன்று ஆஸ்ரம் என்ற படம் மூலமாக மலையாளத்திலும் அறிமுகமான பாக்ய ஸ்ரீ, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

60க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த அவர், வாசுதேவன் மன்னடியாரை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்தார்.

பின்னர் சின்ன திரையில் நடிக்கத் தொடங்கினார். தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் பார்வதி என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியின் லட்சுமி தொடரிலும் நடித்திருந்தார்.

பாக்ய ஸ்ரீ

இதனைடையே தனது சினிமா அனுபவம் குறித்து பாக்ய ஸ்ரீ பேசிய விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அதில், தனது கணவர் இறந்த 3 மாதத்திற்கு பிறகு சிறகடிக்க ஆசை தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக உருக்கம் தெரிவித்துள்ளார். இந்தத் தொடர் தன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாகவும், படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பம் போல தன்னை கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மட்டுமின்றி நடிக்க வந்த ஆரம்பக்கட்டத்தில் சினிமா வாய்ப்புகளுக்காக ஹார்மோன் ஊசி பயன்படுத்தியதையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

சிறகடிக்க ஆசை தொடரில் பாக்ய ஸ்ரீ

அந்தக் காலகட்டத்தில் நடிகைகள் ஒல்லியான தேகத்தில் இருக்கக் கூடாது என்றும், தான் ஒல்லியாக இருந்ததால் பல பட வாய்ப்புகள் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதனால் பின்விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறியதையும் பொருட்படுத்தாமல், ஊசி போட்டுக்கொண்டதாகவும், ஆனால் தற்போது உடல் எடை கூடுதலாக இருப்பதாகவும், அதனை குறைக்க முடியாமல் அவதியுறுவதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | சிறகடிக்க ஆசை தொடருக்கு முதலில் வைத்த பெயர் தெரியுமா?

தன்பாலின ஈர்ப்பாளராகக் கணவர்... விவாகரத்து வழக்கில் முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை குற்றச்சாட்டு!

விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பமாக தனது கணவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்று முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் வீராங்கனை குற்றம் சாட்டி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அர்ஜுனா விருது வென்றவரான முன்னாள்... மேலும் பார்க்க

ஃபஹத் ஃபாசில், வடிவேலுவின் மாரீசன் வெளியீடு அப்டேட்!

மாரீசன் திரைப்படத்தின் வெளியீடு குறித்து அறிவித்துள்ளனர்.மாமன்னனில் மிகச்சிறப்பாகநடித்தவடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்று வருகின்றனர். அதற்காக, நிறைய கதைகளை வடிவேலு... மேலும் பார்க்க

எம்புரான் 3 நிமிட காட்சிகள் நீக்கம்!

எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டது.எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் - பிருத்விராஜ்ஜ... மேலும் பார்க்க

நிறைவடையும் ரஞ்சனி சீரியல்: அன்னம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ரஞ்சனி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், இத்தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் அன்னம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ரஞ்சனி தொடர் ஒளிபரப... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குநர் சனோஜ் மிஸ்ர கைது!

பிரபல பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ர பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார். ஸ்ரீநகர், கஸ்னவி, தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சனோஜ் மிஸ்ர. பெரிய வெற்றிகளைக் கொடுக்காவ... மேலும் பார்க்க