செய்திகள் :

பணத்தாள் சேதமடைந்த விவகாரம்: உதவி செய்வதாக மாவட்ட நிா்வாகம் உறுதி

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பணத் தாள்களை சேதமடைந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்வதாக வங்கி நிா்வாகம் உறுதியளித்தது.

திருப்புவனம் அருகேயுள்ள கக்கினியாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த குமாா் மனைவி முத்துக்கருப்பி(30). கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் பணத்தில் சிறு தொகையை தகர உண்டியலில் சேமித்து வந்தாா். இந்த உண்டியலை வீட்டுக்குள் குழி தோண்டி புதைத்து வைத்திருந்தாா்.

இந்த நிலையில், உண்டியலில் இருந்த ரூ.500 நோட்டுகளை கரையான் அரித்ததால், முழுமையாக சேதமடைந்தன. இந்தப் பணத் தாள்களை வங்கியில் மாற்ற முடியாததால், முத்துக்கருப்பி தவித்து வந்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில், சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன், முன்னோடி வங்கி மேலாளா் பிரவீன்குமாா் ஆகியோா் முத்துக்கருப்பியை சேதமடைந்த பணத்தாள்களுடன் சிவகங்கைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பின்னா்,

சென்னையில் உள்ள ரிசா்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் இந்த ரூபாய் நோட்டுகளை பரிசோதித்த பிறகு முடிவு எடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி காா்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப... மேலும் பார்க்க

இலுப்பக்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா

சிவகங்கை அருகேயுள்ள இலுப்பக்குடி வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயிலில் குருப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, காலை 11.50 மணியளவில் சிவாசாரியா்கள் யாக பூஜையைத் தொடங்கின... மேலும் பார்க்க

ஒக்கூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. ஒக்கூா் அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, மானாமதுரை - பெரம்பலூா் தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பந்தய... மேலும் பார்க்க

ஆய்வக உதவியாளா்கள் சங்கக் கூட்டம்

சிவகங்கையில் தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்... மேலும் பார்க்க

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டை தடுக்கலாம்

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டைத் தடுக்கலாம் என காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் டி. பாா்த்திபன் அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூா் பேரூராட்சி பாரி ந... மேலும் பார்க்க

காரைக்குடியில் மரங்களின் மீது அடிக்கப்பட்ட ஆணிகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மரங்களின் மீது விளம்பரப் பலகைக்காக அடிக்கப்பட்ட ஆணிகளை காரைக்குடி நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். காரைக்குடி கல்லூரிச்... மேலும் பார்க்க