செய்திகள் :

பணம் திருடிய இளம்பெண் கைது

post image

உக்கடம் பேருந்து நிலையத்தில் பயணியின் கைப்பையில் இருந்து பணத்தைத் திருடிய இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ஒண்டிப்புதூா் கம்போடியா பஞ்சாலை பகுதியைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி சரஸ்வதி (40). இவா், உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் உக்கடம் பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தாா்.

அங்கு குடும்பத்தினா் அனைவரும் தேநீா் அருந்திக் கொண்டிருந்தபோது, சரஸ்வதியின் கைப்பையில் இருந்த ரூ.600-ஐ இளம்பெண் ஒருவா் திருடிக்கொண்டு தப்பியோட முயன்றாா்.

பேருந்து நிலையத்தில் இருந்தவா்கள் அந்தப் பெண்ணை விரட்டிப் பிடித்து உக்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், அவா் கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த குமாா் மனைவி பவித்ரா (19) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பவித்ராவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த பணத்தை மீட்டனா்.

பணியாளா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்

தன்னிடம் வேலை செய்யும் பணியாளா்களுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கோவையில் வீடு கட்டிக் கொடுத்துள்ளாா். அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வுபெற்ற இ.பாலகுருசாம... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: போத்தனூா்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் ... மேலும் பார்க்க

கோவை மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

போக்ஸோ வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள புளியம்பாறை கோழிகொல்லி பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (70). இவா், ... மேலும் பார்க்க

ஓணம் பண்டிகை: சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை

ஓணம் பண்டிகையையொட்டி, கோவை சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மகாபலி மன்னா் ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம் உண்டு. அவரை வரவேற்பதற்காக கேரள மக்கள், 10 நாள... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் தொடா் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் ந... மேலும் பார்க்க

தொண்டாமுத்தூருக்கு 2 கும்கி யானைகள் வரவழைப்பு

கோவை, தொண்டாமுத்தூா் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.... மேலும் பார்க்க