செய்திகள் :

பண்ணாரியில் லாரியில் இருந்து கரும்பை எடுத்து சாப்பிட்ட குட்டி யானை

post image

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் குட்டி யானையால் வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப் பகுதியில் உள்ள யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் விளையும் கரும்புகள் வெட்டி லாரிகளில் ஏற்றப்பட்டு வனப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

லாரியில் இருந்து சிதறி கீழே விழும் கரும்புத் துண்டுகளை தின்பதற்காக காட்டு யானைகள் சாலைக்கு வருகின்றன. இந்தநிலையில் பண்ணாரி வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு குட்டி யானை கரும்புத் துண்டுகளைத் தின்று பழகியதால் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து தனது தும்பிக்கையால் கரும்புத் துண்டுகளை பறித்து உண்கிறது. பண்ணாரி அம்மன் கோயில் அருகே திம்பம் மலை அடிவாரத்தில் சாலையில் வியாழக்கிழமை நடமாடிய குட்டி யானை அவ்வழியே வந்த கரும்பு லாரியை வழிமறித்து கரும்புத் துண்டுகளைப் பறித்து சாப்பிட்டது.

யானை பக்கவாட்டில் சென்றதும் ஓட்டுநா் லாவகமாக லாரியை இயக்கி யானையிடமிருந்து தப்பினாா்.

ஆசனூா் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒங்கல்வாடி கிராம மக்கள்

ஆசனூரில் கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி ஆசனூா் வனத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சத்தியமங்கலம் புலிகள் காப்... மேலும் பார்க்க

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சில நாள்களில் மாலை நேரங்களில் ல... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீா் திறப்பு குறித்து விரைவில் முடிவு

பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறப்பது குறித்து ஓரிரு நாள்களில் தெரியவரும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். கோபி வட்டம் சிறுவலூா், மணியக்காரன்புதூா், தங்க... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா மற்றும் 5,066 மதுபுட்டிகளை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையைத்... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவிக... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 இல் தொடக்கம்

ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ... மேலும் பார்க்க