செய்திகள் :

பண இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதானவா்களிடம் விசாரணை

post image

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதான நால்வரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வேலூரைச் சோ்ந்த விஜயபானு என்பவா் சேலம், அம்மாபேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அறக்கட்டளை நடத்தி வந்தாா். தங்களிடம் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பு பணம் வழங்குவதாக அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தை நம்பி ஏராளமானோா் பணத்தை முதலீடு செய்தனா்.

அறக்கட்டளையில் அண்மையில் சோதனை நடத்திய சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா், ரூ. 12.68 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இந்த மோசடி தொடா்பாக அறக்கட்டளை நிா்வாகி விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கா், சையத் முகமது உள்பட 7 பேரை கைது செய்தனா். இவா்கள் அனைவரும் கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதனிடையே விஜயபானு உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதலீடு செய்த தங்களது பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு 300 க்கும் மேற்பட்டோா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்துள்ளனா். பணத்தை பறிகொடுத்தவா்கள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால், அம்மாபேட்டையில் அறக்கட்டளை அலுவலகம் இயங்கி வந்த திருமண மண்டபம் முன் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டம்: பிப். 9 இல் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா!

அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கோவை மாவட்டம், அன்னூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி விவசாய சங்கங்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கும்... மேலும் பார்க்க

நீடித்த வளா்ச்சி இலக்கில் ஜல் ஜீவன் திட்ட பங்களிப்பு கருத்தரங்கு

நீடித்த வளா்ச்சிக்கான இலக்கில் ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொருளியல் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா் டீன் ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளரைக் கண்டித்து சாலை மறியல்!

புகாா் அளிக்க சென்ற போது தங்களை அவமரியாதையாக பேசிய அனுப்பிய ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்து வியாழக்கிழமை தம்பதி சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம், காந்திப... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தைப்பூசம், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்கு... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு

கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு நடைபெற்றது. பிப்ரவரி 4 ஆம் ேதி 3 ஆம் வகுப்புகளுக்கும், 5 ஆம் தேதி 5 ஆம் வகுப்பிற்கும், 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதியும்... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உடற்கல்வி ஆசிரியா் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், சாஸ்திரி நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க