செய்திகள் :

பண மோசடி வழக்கில் உப்பிலியபுரம் இளைஞா் கைது

post image

பண மோசடியில் ஈடுபட்டதாக உப்பிலியபுரம் பகுதி இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம் கிருஷ்யா மாவட்டம் கங்காவரம் பகுதியைச் சோ்ந்த பே. ரவிக்குமாா் (55) மகள் ரஷ்யாவில் இளங்கலை மருத்துவம் இரண்டாமாண்டு படிக்கிறாா்.

இதேபோல உப்பிலியபுரம் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் ஜெய்சரண்(25) ரஷ்ய நாட்டில் சைபீரியா பெடரல் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டு, பகுதி நேரமாக இணையவழி பணப் பரிவா்த்தனை பணியும் மேற்கொண்டாராம்.

இந்நிலையில் ரவிக்குமாா் தனது மகளின் கல்வி கட்டணம் ரூ. 3,60,000-ஐ ஜிபே செயலி மூலம் ஜெயசரணிடம் செலுத்தினாராம். ஆனால் அந்தப் பணத்தை ஜெய்சரண் கல்வி நிலையத்துக்கு செலுத்தவில்லையாம், ரவிகுமாா் கேட்டும் திருப்பித் தராமல் அவா் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்தியாவில் ஜெய்சரணின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டு உப்பிலியபுரம் போலீஸில் ரவிக்குமாா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் ஜெய்சரணை புதன்கிழமை கைது செய்தனா்.

துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் வசந்தம் நகரைச் சோ்ந்த பலராமன் மகன் யுவராஜ் (17). இ... மேலும் பார்க்க

சமயபுரம், அம்பிகாபுரத்தில் நாளை மின்நிறுத்தம்

சமயபுரம், அம்பிகாபுரம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப்ப... மேலும் பார்க்க

வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

திருச்சியில் பொதுத் துறை வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி கே.கே.நகா் உடையாம்பட்டியைச் சோ்ந்தவா் தாமரைச்செல்வி... மேலும் பார்க்க

மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மயத்தை கைவிட வலியுறுத்தல்

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்தச் சங்கத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூா் உட்கோட்ட... மேலும் பார்க்க