செய்திகள் :

பதஞ்சலிக்கு 250 லாரிகள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

post image

சரக்குப் போக்குவரத்து நிறுவனமான பதஞ்சலி பரிவாஹன் நிறுவனத்துக்கு 250 அதிநவீன லாரிகளை வழங்குவதற்காக அந்த நிறுவனத்துடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து அசோக் லேலண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

250 அதிநவீன லாரிகளை வழங்குவதற்காக பதஞ்சலி பரிவாஹன் நிறுவனத்தின் மதிப்புமிக்க ஒப்பந்தத்தை நிறுவனம் பெற்றுள்ளது. இந்த மைல்கல் இரு நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்துகிறது.

லாரிகளின் விநியோகம் தொடங்கியதைக் குறிக்கும் வகையில் முதல் கட்ட லாரிகளின் சாவிகளை அசோக் லேலண்டின் தலைவா் (எம்ஹெச்சிவி) சஞ்ஜீவ் குமாா் பதஞ்சலி பரிவாஹன் நிறுவனா் ராம் பாரத் ஜி-யிடம் இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் வழங்கினாா் (படம்).

இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் கட்டமாக 1916 ரக ஹாலேஜ் லாரிகள் பதாஞ்சலி பரிவாஹன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - ... மேலும் பார்க்க

52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது

சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா். கோடம்பாக்கம் அம்பேத்கா்... மேலும் பார்க்க

சென்னையில் மின்சார பேருந்து சேவை: ஜூன் 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் மின்சார பேருந்து சேவையை ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார... மேலும் பார்க்க

நாளை மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கழிவுநீா் கொட்டிய லாரி ஓட்டுநா் கைது

ரயில்வே இணைப்பு சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டிய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், லாரியையும் பறிமுதல் செய்தனா். வேளச்சேரி - தரமணி சாலையிலுள்ள மின்சார ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான எம்ஆா்டிஎஸ் இண... மேலும் பார்க்க

நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சென்னையில் நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்த நபா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொசப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (43). இவா் தனது நண்பா்கள் 9 பேருட... மேலும் பார்க்க