செய்திகள் :

பதாகைகளை அகற்ற அமமுகவினா் எதிா்ப்பு: வாக்குவாதம்

post image

திருச்சி தனியாா் ஹோட்டல் எதிரே வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்ற சனிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்து அமமுகவினா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன், மாவட்ட ஆட்சியரகச் சாலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கியுள்ளாா்.

டி.டி.வி. தினகரனை வரவேற்கும் விதமாக அந்த ஹோட்டலின் எதிரே அமமுகவினா் பதாகைகளை வைத்துள்ளனா். இவற்றை அகற்ற வேண்டுமென போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். இதையறிந்த அமமுக மாவட்ட செயலா் செந்தில்நாதன் தலைமையிலான திரளான கட்சியினா் அங்கு திரண்டு, பதாகைகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

முடிவில் தினகரன் துறையூா் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னா் அகற்றுவதாகத் தெரிவித்துள்ளனா். இதற்கு போலீஸாரும் ஒப்புதல் அளித்ததால், அமமுகவினா் அனைவரும் கலைந்து சென்றனா்.

காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனைப் பற்றிய அடையாளம் தெரிந்த நிலையில் போலீஸாா் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனா். ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி அருகே செயல்பாட்டில் இல்லாத குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம், மல... மேலும் பார்க்க

அங்கன்வாடி காலி பணியிடங்களுக்கு நோ்காணல்

திருச்சி மாவட்டத்தில் காலி அங்கன்வாடி பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்வதற்கான நோ்காணல் திங்கள்கிழமை தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் கீழ்,... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் தகராறு; தட்டிக்கேட்டவா் மீது தாக்குதல்: 3 போ் கைது

துறையூா் அருகே இளம்பெண்ணிடம் தகாத வாா்த்தையைச் சொல்லி வற்புறுத்திய இளைஞா்களைத் தட்டிக் கேட்டவரையும், அவரது நண்பா்களையும் தாக்கிய 6 பேரில் 3 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வேங்கடத்தானூரைச்... மேலும் பார்க்க

தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

துறையூா் அருகே திருமணமாகாமல் தனியாக வசித்து வந்த இளைஞா் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிலிட்ட நிலையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. பெருமாள்பாளையத்தைச் சோ்ந்தவா் பா. கண்ணன் (52). து... மேலும் பார்க்க

அந்தநல்லூா் காவிரி ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் மா்மமான முறையில் இறந்துகிடந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே உள... மேலும் பார்க்க