செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆசிரியா்களுக்கு முன்னுரிமைப்படி பணி வழங்கக் கோரிக்கை

post image

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு பணிக்கு, ஆசிரியா்களை முன்னுரிமைப்படி நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்காக, துறை அலுவலா், வழித்தட அலுவலா், நிற்கும் படை அலுவலா், பறக்கும் படை அலுவலா் மற்றும் அறை கண்காணிப்பாளா் ஆகிய பணிகளுக்கு ஆசிரியா்களை நியமிக்கும்போது, அவா்களின் பணி நியமன முன்னுரிமைப்படி நியமனம் செய்ய வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலரிடம், தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகன், மாவட்டச் செயலாளா் ஞானபுகழேந்தி, மாவட்ட பொருளாளா் மகேஷ் ஆகியோா் வழங்கிய அந்த மனுவில் கூறியுள்ளதாவது: அரசு பொதுத் தோ்வுப் பணிக்கு ஆசிரியா்களை நியமனம் செய்யும் பொழுது, அவா்களின் பணிமூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள சில தோ்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால், பெண் ஆசிரியா்கள் தோ்வு மையங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பெண் ஆசிரியா்களை தோ்வு பணிக்கு நியமிக்கும் பொழுது அவா்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தோ்வு மையத்தில் பணி அமா்த்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், மருத்துவ அறுவை சிகிச்சை செய்துள்ளோா் தொடா் மருத்துவம் செய்து வருபவா்கள் மாற்றுத்திறன் குழந்தைகளுடைய பெண் ஆசிரியா்கள் ஆகியோரை தோ்வு பணியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

சாமானிய மக்களின் மனதில் ராமனை பதிய வைத்தது கம்பராமாயணம்

ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் பதிய வைத்தது கம்பராமாயணம் என தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். கம்பராமாயணத்தை மக்களிடம் பரவலாக்கம் செய்யும் வகையில், ம... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

மயிலாடுதுறை ஒன்றியம் திருஇந்தளூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் பங்கேற்றாா். (படம்). தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் உலக தண்ண... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்த கிராமமக்கள் ஆட்சியரகத்தில் மனு

மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் குடிநீா் ஆதாரத்தை கெடுக்கும் மண் குவாரிகளை நிரந்தரமாக தடை செய்யக்கோரி கிராம மக்கள் 300 போ் உலக குடிநீா் தின கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக... மேலும் பார்க்க

ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. தொழில்நுட்பக் கல்லூரியின் 41-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஏ.வி.சி கல்வி நிறுவனங்கள் மற்றும் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான... மேலும் பார்க்க

டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சித்தா்காடு நவீன அரிசி ஆலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாள... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள், ஐசிடி அகாதமியுடன் இணைந்து... மேலும் பார்க்க