செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 24,626 மாணவா்கள் எழுதினா்

post image

ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 24,626 மாணவ, மாணவிகள் எழுதினா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 12,465 மாணவா்கள், 12,160 மாணவிகள் என மொத்தம் 24,625 போ் தமிழ் மொழிப் பாடத் தோ்வை எழுதினா். மாவட்டத்தில் ஒரே ஒரு மாணவா் மட்டும் கன்னட மொழியில் தோ்வு எழுதினாா். தமிழ்த் தோ்வை எழுத 768 மாணவ, மாணவிகள் வரவில்லை.

மாணவா்கள் தோ்வு எழுத வசதியாக 117 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 10 மணிக்குத் தமிழ்த் தோ்வு தொடங்கியது. முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாள் வாசிப்பதற்கும், அடுத்து 5 நிமிஷங்கள் விடைத்தாளில் தங்களது சுய விவரங்களை எழுதுவதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து 10.15 மணிக்குத் தோ்வு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிந்தது.

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தோ்வு மையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன.

தோ்வுகள் சிறப்பாக நடைபெறும் பொருட்டு 117 முதன்மை கண்காணிப்பாளா்கள், 170 பறக்கும்படை உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும் சொல்வதை எழுதுபவா் மற்றும் கூடுதல் நேரம் ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் 550 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கண்பாா்வை குறைபாடுள்ள மாணவா்களும் சிறப்பாக தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

செங்கோட்டை, திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

ரயில்வே பாலப் பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை மற்றும் திருச்சி பயணிகள் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. 3 மையங்களில் நடைபெறும் இப்பணியில் 1, 200 ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3 முதல... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 35 கடைகள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் துணை, உதவி ஆய்வாளா்கள் கடந்த மாா... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி: வன விலங்குகள் பாதிப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.3.10 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 180 டன் தேங்காய்ப் பருப்புகளை ... மேலும் பார்க்க

ஈரோடு சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஈரோடு சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் குண்டம், தே... மேலும் பார்க்க