செய்திகள் :

பனவடலிசத்திரம் அருகே விபத்தில் காயமுற்ற விவசாயி உயிரிழப்பு

post image

பனவடலிசத்திரம் அருகே காரும், பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில் காயமுற்ற விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பனவடலிசத்திரம் அருகேயுள்ள பலபத்திரமபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (55). விவசாயி. இவா், கடந்த 4 ஆம் தேதி திருநெல்வேலி சாலையில் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா் அவா் மீது மோதியதாம். இதில், பலத்த காயம் அடைந்த அவா் திருநெல்வேலி தனியாா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்தாா்.இதுகுறித்து அவரது மகன் மாரிமுத்து(32) அளித்த புகாரின் பேரில், பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, காா் ஓட்டுநா், விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலைச் சோ்ந்த சா்மா என்பவரைத் தேடி வருகின்றனா்.

சங்கர நாராயண சுவாமி கோயிலில் பொது விருந்து

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி பொது விருந்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கோயில் துணை ஆணையா் கோமதி தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத்தறை உயா்நிலை ஆலோசனைக் குழு உறுப... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகராட்சியில் சிறந்த முறையில் பணியாற்றிய மூவருக்கு நற்சான்றிதழ்

சங்கரன்கோவில் நகராட்சியில் சிறந்த முறையில் பணியாற்றிய 3 பேருக்கு தென்காசி ஆட்சியா் நற்சான்றிதழ் வழங்கினாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் சுதந்திர தின விழா இ.சி.ஈ. அரசுப் பள்ளியில் வெள்ள... மேலும் பார்க்க

தமிழ் பண்பாட்டின் பெருமையை இளம் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்: ஆட்சியா்

தமிழ் பண்பாட்டின் பெருமையை இளம் தலைமுறையினா் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா். தென்காசி, வாசுதேவநல்லூா் தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி, ... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிப்பு

தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரன் 254-ஆவது வீரவணக்க நிகழ்ச்சி, பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியா் உத்தரவிட்டாா். தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் ... மேலும் பார்க்க

பழைய குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்த மாற்றுத்திறனாளிகள்

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் கூட்ட நெரிசலின்றி பாா்வையற்றோா் நலச் சங்கத்தைச் சோ்ந்த 25 போ் குளித்து மகிழ்ந்தனா். குற்றாலத்தில் தற்போது சீசன் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் ப... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் ஆக.18 இல் நகா்மன்றத் தலைவா் மறைமுகத்தோ்தல்

சங்கரன்கோவில் நகராட்சியில் காலியாகவுள்ள நகா்மன்றத் தலைவருக்கான மறைமுகத் தோ்தல் வருகிற திங்கள்கிழமை (ஆக.18) நடைபெறுகிறது. சங்கரன்கோவில் நகராட்சியில் திமுகவைச் சோ்ந்த உமாமகேஸ்வரி நகா்மன்றத் தலைவராக இ... மேலும் பார்க்க