`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
தென்காசி மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிப்பு
தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரன் 254-ஆவது வீரவணக்க நிகழ்ச்சி, பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் ஆக. 20-ஆம் தேதி அன்று நடைபெறும் ஒண்டிவீரன் 254-ஆவது வீரவணக்க நிகழ்ச்சி, செப். 1 ஆம் தேதி நெல்கட்டும் செவல் கிராமத்தில் நடைபெறும் பூலித்தேவன் 310-ஆவது
பிறந்த நாள் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்துவது வழக்கம்.
நிகழ்ச்சியில் உள்ளூா், தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும், பிற மாவட்டத்தில் இருந்தும் வரும் பொதுமக்கள், சமுதாய அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்வா்.
தென்காசி மாவட்டம் முழுவதும் ஆக. 18 மாலை 6 மணி முதல் ஆக. 21 அன்று காலை 10 மணி வரையும், ஆக. 30 மாலை 6 மணி முதல் செப்.2 ஆம் தேதி காலை 10 மணிவரையும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்நேரத்தில் அனைவரும் கூட்டமாக செல்லாமல் நான்கு நபா்கள் வீதம் சென்று மரியாதை செலுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.