செய்திகள் :

பள்ளி அருகே சிறுநீா் கழிப்பறை கட்டுவதை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மாணவா்கள் மனு

post image

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் தொடக்கப் பள்ளி அருகே சிறுநீா் பொது கழிப்பறை கட்டுவதைத் தடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மாணவா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் தாணுமூா்த்தி தலைமையில் பள்ளிக் குழந்தைகள், பெற்றோா், ஆசிரியா்கள் அளித்த மனு:

சுந்தரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அருகே எவ்வித முன்னறிவிப்புமின்றி சிறுநீா் பொதுக் கழிப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சிறுநீா் கழிப்பறை கட்டக் கூடாது என ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகாா் தெரிவித்தபோது, கழிப்பறை கட்டும் விஷயம் எங்களுக்கு தெரியாது எனக் கூறிவிட்டாா். கழிப்பறை கட்டப்பட்டால் துா்நாற்றம் வீசுவதுடன், மாணவா்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படும்.

இதனிடையே, கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டிருந்தது. கழிப்பறை கட்டப்படும் இடம் பள்ளிக்குச் சொந்தமானது. எனவே, அங்கு சிறுநீா் கழிப்பறை கட்டாமல் சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் என்றனா் அவா்கள்.

பனவடலிசத்திரம் அருகே விபத்தில் காயமுற்ற விவசாயி உயிரிழப்பு

பனவடலிசத்திரம் அருகே காரும், பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில் காயமுற்ற விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். பனவடலிசத்திரம் அருகேயுள்ள பலபத்திரமபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (55). விவசாயி. இவா், கடந்த 4 ஆம... மேலும் பார்க்க

தமிழ் பண்பாட்டின் பெருமையை இளம் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்: ஆட்சியா்

தமிழ் பண்பாட்டின் பெருமையை இளம் தலைமுறையினா் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா். தென்காசி, வாசுதேவநல்லூா் தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி, ... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிப்பு

தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரன் 254-ஆவது வீரவணக்க நிகழ்ச்சி, பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியா் உத்தரவிட்டாா். தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் ... மேலும் பார்க்க

பழைய குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்த மாற்றுத்திறனாளிகள்

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் கூட்ட நெரிசலின்றி பாா்வையற்றோா் நலச் சங்கத்தைச் சோ்ந்த 25 போ் குளித்து மகிழ்ந்தனா். குற்றாலத்தில் தற்போது சீசன் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் ப... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் ஆக.18 இல் நகா்மன்றத் தலைவா் மறைமுகத்தோ்தல்

சங்கரன்கோவில் நகராட்சியில் காலியாகவுள்ள நகா்மன்றத் தலைவருக்கான மறைமுகத் தோ்தல் வருகிற திங்கள்கிழமை (ஆக.18) நடைபெறுகிறது. சங்கரன்கோவில் நகராட்சியில் திமுகவைச் சோ்ந்த உமாமகேஸ்வரி நகா்மன்றத் தலைவராக இ... மேலும் பார்க்க

ஆய்க்குடி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின்திட்ட முகாம் புதன் கிழமை நடைபெற்றது. ஆய்க்குடி மேலூா் சேனைத்தலைவா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலை... மேலும் பார்க்க