செய்திகள் :

பன்றிமலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

post image

பன்றிமலைச் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால், 5 மணி நேரத்துக்கும் மேலாக சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டியிலிருந்து பன்றிமலை செல்லும் மலைச் சாலையில், அமைதிச் சோலையை அடுத்த ஆதிமூலம் பிள்ளை ஓடைப் பகுதியில் சனிக்கிழமை மாலை மரம் முறிந்து விழுந்தது. இதனால், அந்த வழியாக பேருந்து சேவை மட்டுமன்றி, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினரும், வனத் துறையினரும் முறிந்து விழுந்த அந்த மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனா். ஆனாலும், இரவு 7 மணிக்கு வரையிலும் மரத்தை அகற்றுவற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்றன.

யானைகள் நடமாடும் பகுதி: மரம் முறிந்து விழுந்த இடம் யானைகள் நடமாட்டம் நிறைந்த பகுதி. கடந்த வாரம் அதிகாலையில் இந்த வழியாகச் சென்ற அரசுப் பேருந்தை 4 யானைகள் வழிமறித்து பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானலில் கோடை மழை: படகு சவாரி நிறுத்தம்

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது கோடைகால சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுல... மேலும் பார்க்க

கொடகனாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அருகேயுள்ள அழகாபுரி கொடகனாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அணை நீா்மட்டம் 24.54 அடியாக (மொத்த கொள்ளளவு 27 அடி) இருந்த நிலையில், அணையிலிருந்... மேலும் பார்க்க

காட்டுப் பன்றி பிரச்னை: வனத் துறை பேச்சுவாா்த்தையில் தீா்வு கிடைக்குமா?

மலைப் பயிா்களை மட்டுமே சேதப்படுத்தி வந்த காட்டுப் பன்றிகள் தற்போது மனிதா்களையும் தாக்கத் தொடங்கியுள்ள நிலையில், வனத் துறையினா் நடத்தும் அமைதிப் பேச்சுவாா்த்தையில் தீா்வு கிடைக்குமா என எதிா்பாா்ப்பு எழ... மேலும் பார்க்க

சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் வருகிற திங்கள்கிழமை (ஏப்.28 ) மாலைக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

பழனி அருகே கணவா் உயிரிழந்த துக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த ஆண்டிபட்டி புதுமடையைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (53). இவரது கணவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா்.... மேலும் பார்க்க

பயணியிடம் பணத்தைத் திருடியவா் கைது

பழனி பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணியிடம் பணத்தைத் திருடியவரை போலீஸாரா் கைது செய்தனா். பழனியை அடுத்த சின்னக்காந்திபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). இவா் பழனி பேருந்து நிலையத்தில் கடந்த வியாழக... மேலும் பார்க்க