செய்திகள் :

பயங்கரவாதத்துக்கு பிரதமரின் பதில்தான் ஆபரேஷன் சிந்தூர்: அமித் ஷா பாராட்டு

post image

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இந்தத் தாக்குதலின் மூலம் இந்திய ராணுவத்தின் செயல்திறனை உலக அரங்குக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் முன்னிறுத்தும் நடவடிக்கையைத்தான் இந்தியா மேற்கொண்டது.

இந்த நிலையில், தில்லியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, ``பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான அரசியல் நிலைத்தன்மை, நமது உளவுத்துறையின் துல்லியமான தகவல்கள் மற்றும் ராணுவத்தின் செயல்திறன் ஆகியவை ஒன்றிணைந்ததுதான் ஆபரேஷன் சிந்தூர். பல ஆண்டுகளாக பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாத அமைப்புகளால், பல்வேறு தாக்குதல்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில், பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து, உரியில் நடத்தப்பட்ட தாக்குதல், புல்வாமா தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. தற்போது, ​​பஹல்காமில், சுற்றுலாப் பயணிகளின் மதத்தைக் கேட்ட பின்னர், அவர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதில்தான், ஆபரேஷன் சிந்தூர்.

இதற்காகவே, இந்தியாவை உலக நாடுகள் பாராட்டுகின்றன. ​​வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய இரண்டு கடினமான எல்லைகளை பாதுகாக்கும் பொறுப்பு, எல்லைப் பாதுகாப்புப் படையிடம் வழங்கப்பட்டது. அந்த உயர்பொறுப்பைக் கருத்தில்கொண்டு, நீங்களும் அதனை மிகச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள்.

பஹல்காமில் மக்களை பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்றதற்கு தகுந்த பதில் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அந்த பதில்தான், இன்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

இப்போது நமது ஆயுதப் படைகளையும் அவர்களின் தாக்குதல் திறன்களையும் முழு உலகமும் பாராட்டுகிறது’’ என்று தெரிவித்தார்.

‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி: பிரதமா் மோடி பெருமிதம்

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா். தில்லியில் ‘வளரும் வடகிழக்கு முதலீட்டாளா்கள் மாநாடு’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த இ... மேலும் பார்க்க

அரசமைப்பு உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாக்கிறது: நீதிபதி அபய் எஸ்.ஓகா

அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் மட்டும்தான் பாதுகாத்து வருகிறது என்று பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தெரிவித்தாா். நீதிபதி அபய் எஸ்.ஓகாவின் தாயாா் கடந்த இரண்டு தினங்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்க... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிப்பு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி... மேலும் பார்க்க