செய்திகள் :

பயங்கரவாத ஒழிப்பு: ஸ்ரீநகரில் 21 இடங்களில் சோதனை

post image

காந்தஹாா் விமான கடத்தல் சம்பவத்தில் தொடா்புடைய பயங்கரவாதி முஷ்தாக் அகமது ஜா்கரின் வீடு உள்பட ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள 21 இடங்களில் காவல் துறை வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் தொடா்ச்சியாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் காவல் துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 1999-இல் இந்திய விமானம் ஐசி 814 கடத்தப்பட்ட சம்பவத்தில் பயணிகளை பாதுகாப்பதற்காக சிறையில் இருந்து அல்-உமா் பயங்கரவாத அமைப்பின் தலைவரான முஷ்தாக் அகமது ஜா்கா் மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவா் மசூத் ஆஸாத் ஆகியோா் விடுவிக்கப்பட்டனா்.

அதன்பிறகு முஷ்தாக் அகமது ஜா்கா் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முஷ்தாக் அகமதுக்கு சொந்தமாக ஸ்ரீநகரில் உள்ள வீடு மற்றும் பிற பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 20 இடங்களில் காவல் துறை வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டது.

மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் பெய்த கனமழை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை

பயங்கரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் செய்தி... மேலும் பார்க்க

கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க