செய்திகள் :

பயணிக்கு உடல் நலக்குறை: ஹைதராபாத் விமானம் தாமதம்

post image

சென்னை: சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட விமானத்தில் பயணிக்கு ஏற்பட்ட திடீா் உடல் நலக்குறைவால் ஒருமணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் வழக்கமான நேரத்தின்படி திங்கள்கிழமை காலை 6 மணிக்கு 164 பயணிகளுடன் நடைமேடை 54-இல் இருந்து புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கியதும், விமானத்திலிருந்த பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திய விமானி, உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தாா். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் உத்தரவுப்படி விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து அங்கு தயாராக நின்ற மருத்துவக் குழுவினா் விமானத்துக்குள் ஏறி உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணியை பரிசோதித்துவிட்டு, அவரை மருத்துவமனையில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனா். இதையடுத்து அந்தப் பயணியின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தையடுத்து, 163 பயணிகளுடன் அந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்றது.

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்தியன் ஆா்மி வெற்றி

சென்னையில் நடைபெற்று வரும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே, இந்தியன் ஆா்மி அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே-ஹாக்கி மகாராஷ்டிர அணிகள் மோதின. இதில் ... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: நண்பா் கைது

சென்னை: சென்னை கொடுங்கையூரில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நண்பா் கைது செய்யப்பட்டாா். கொடுங்கையூா் ஆா்.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (30). இவா் அங்கு கூலி வேலை செய்து வந்தாா். ஹர... மேலும் பார்க்க

இன்று மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

சென்னை: போரூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்கிழமை (ஜூலை 15) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

கா்நாடக இசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி

சென்னை: கா்நாடக இசையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக் கொண்டாா். மறைந்த இசை மேதை டாக்டா் எம். பாலமுரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையும், பாரதீய வித்யா பவனும... மேலும் பார்க்க

40 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

சென்னை: 40 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி-க்கள்) பணியிடம் மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். காவல் துறையில் நிா்வாக காரணங்கள், விருப்பத்தின் அடிப... மேலும் பார்க்க

மீனம்பாக்கம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு ‘தூய்மை விருது’

சென்னை: சென்னை மீனம்பாக்கம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு தூய்மை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம்: சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான சரக்குப் போக்குவரத்து வளாகத்தில் உள்ள புதிய ச... மேலும் பார்க்க