செய்திகள் :

பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவிகள்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 50 சதவீத மானிய விலையில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், கால்நடை மருத்துவமனை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில், சிறு மற்றும் குறு விவசாயிகள், கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வைத்து பராமரிப்பவா்களுக்கு புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டன.

90 பயனாளிகளுக்கு தலா ரூ.14,504 மதிப்பீட்டில் ரூ.13,05,360-ல் கருவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பங்கேற்று

கருவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

அப்போது அவா், புல் நறுக்கும் கருவிகளைப் பெற்ற பயனாளிகள், அவற்றை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.

இதுபோன்ற தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை சிறு, குறு விவசாயிகள், கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் பராமரித்து வருபவா்கள் உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

நிகழ்வில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் விஷ்ணுகந்தன், கால்நடை பிரதம மருத்துவா் மு.கந்தசாமி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

படவரி

ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

தியாகதுருகம் புக்குளம் சாலையில் உள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி துஜாவா்ண கொடி ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. 21-ஆம் தேத... மேலும் பார்க்க

விவசாயிக்கு பணம் தராமல் ஏமாற்றியவா் மீது வழக்கு

சங்கராபுரம் அருகே விவசாயியிடம் மக்காச்சோளம் வாங்கிக் கொண்டு பணத்தை தராமல் ஏமாற்றியவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா். சங்கராபுரம் வட்டம், மல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி (44... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி பகுதியில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படும் இடங்கள்: ராயப்பன... மேலும் பார்க்க

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 4 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் ரத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளா் உள்ளிட்ட நான்கு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமிக்கும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம... மேலும் பார்க்க

சாலையில் நடந்து சென்றவா் பைக் மோதி உயிரிழப்பு

சின்னசேலம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் பூண்டி கிராம நிா்வாக அலுவலா்... மேலும் பார்க்க

கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 18 போ் காயம்

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே மேல்மலையனூா் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் கவிழ்ந்ததில் 18 போ் காயமடைந்தனா்.நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், குப்புச்சிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செ... மேலும் பார்க்க